‛கில்லர்' முதல்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு ‛ஜெயிலர்-2'வில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | காரில் கோளாறு: ஷாரூக்கான், தீபிகா படுகோனே மீது வழக்கு | ‛வார் - 2' படம் தோல்வி அடைந்ததால் ஜூனியர் என்டிஆரின் அடுத்த படத்தை கைவிட்ட நிறுவனம்! | எனது சொகுசு பங்களா வீடியோவை உடனே நீக்குங்கள்! - ஆலியா பட் வைத்த ஆவேச கோரிக்கை | 23 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் ‛ரன்' | சிவகார்த்திகேயனுக்கு போட்டியா : ‛கேபிஒய்' பாலா பதில் | பிளாஷ்பேக்: திகைக்க வைக்கும் 'த்ரில்லர்' திரைப்படத்தின் நாயகனாக எம் என் நம்பியார் நடித்த “திகம்பர சாமியார்” | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ‛பர்ஸ்ட் பன்ச்' எப்படி இருக்கு? | மகுடம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது! | ஷாலின் சோயாவின் இயக்குனர் ஆசை! |
கடந்த மாதத்தில் அஜித்தின் குட் பேக் அக்லி படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்றபோது அருகில் உள்ள ஸ்டுடியோவில் சிரஞ்சீவியின் விஸ்வாம்பரா படப்பிடிப்பு நடைபெற்றது. இதை அறிந்த அஜித்குமார் அங்கு சென்று சிரஞ்சீவியை சந்தித்து நலம் விசாரித்தார். அது குறித்த புகைப்படங்கள் அப்போது வெளியாகின.
இந்த நிலையில் தற்போது அஜித்தின் மனைவியான ஷாலினி மற்றும் அவரது தங்கை ஷாம்லி அவர்களது சகோதரர் ரிச்சர்ட் ஆகிய மூன்று பேரும் சிரஞ்சீவியை நேரில் சந்தித்துள்ளார்கள். அது குறித்த புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார் ஷாம்லி.
சிரஞ்சீவி - ஸ்ரீதேவி இணைந்து நடித்த ஜெகடேகா வீருது அதிலோக சுந்தரி என்ற தெலுங்கு படத்தில் அவர்களுடன் குழந்தை நட்சத்திரமாக தாங்கள் நடித்தபோது எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார். அதோடு, சிரஞ்சீவி சாரின் அன்பு என்றும் மாறாதது என்றும் ஷாம்லி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.