வாழ்ந்த தெருவுக்கு மனோராமா பெயர்: முதல்வருக்கு நடிகர் சங்கம் கடிதம் | சாதாரண மனிதராக என்னை வாழவிடுங்கள் : பலாத்காரத்தில் பாதிக்கப்பட்ட நடிகை உருக்கம் | சூதாட்ட செயலி வழக்கு : பாலிவுட் நடிகர், நடிகைகள் சொத்துக்கள் முடக்கம் | பிளாஷ்பேக்: விஜயகாந்திற்கு 'புரட்சி கலைஞர்' பட்டம் கொடுத்த எஸ்.தாணு | பிளாஷ்பேக் : மெட்டுக்கு உரிமை கேட்டு வழக்கு: நீதிபதி வழங்கிய அசத்தல் தீர்ப்பு | பிரபல மலையாள நடிகர் சீனிவாசன் காலமானார் | இயக்குனர் லிங்குசாமிக்கு ஓராண்டு சிறை | ஜேசன் சஞ்சயின் ‛சிக்மா' படப்பிடிப்பு நிறைவு : டீசர் டிச., 23ல் வெளியீடு | அப்பா ஆகப் போகிறாரா நாகசைதன்யா? நாகார்ஜுனா கொடுத்த பதில் | பிரிவு பரபரப்புக்கு நடுவே செல்வராகவன் போட்ட பதிவு |

நடிகர் அஜித்குமாரின் மனைவியான ஷாலினி அஜித் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலமாக தொடர்ந்து தனது குடும்பத்தினர் எடுத்துக் கொள்ளும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இது அவரது அதிகாரப்பூர்வமான பக்கம் என்பதால் பெருவாரியாக அஜித் ரசிகர்களும் அவரை பின் தொடருகிறார்கள்.
இந்த நிலையில் ஷாலினி அஜித்தின் பெயரில் எக்ஸ் தளத்தில் யாரோ மர்ம நபர் ஒரு போலி கணக்கு தொடங்கி இருக்கிறார். இதை 80 ஆயிரத்துக்கு மேற்பட்ட ரசிகர்கள் பின் தொடருகிறார்கள். இதுகுறித்த தகவல் தனக்கு தெரிய வந்ததை அடுத்து ஒரு அலர்ட் செய்தி வெளியிட்டிருக்கிறார் ஷாலினி. அதில், எக்ஸ் தளத்தில் என்னுடைய பெயரில் ஒரு போலி கணக்கு உள்ளது. அதனால் அது என்னுடைய அக்கவுண்ட் என்று நினைத்து யாரும் பின் தொடர வேண்டாம் என்று அவர் தெரிவித்திருக்கிறார் .