‛கில்லர்' முதல்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு ‛ஜெயிலர்-2'வில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | காரில் கோளாறு: ஷாரூக்கான், தீபிகா படுகோனே மீது வழக்கு | ‛வார் - 2' படம் தோல்வி அடைந்ததால் ஜூனியர் என்டிஆரின் அடுத்த படத்தை கைவிட்ட நிறுவனம்! | எனது சொகுசு பங்களா வீடியோவை உடனே நீக்குங்கள்! - ஆலியா பட் வைத்த ஆவேச கோரிக்கை | 23 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் ‛ரன்' | சிவகார்த்திகேயனுக்கு போட்டியா : ‛கேபிஒய்' பாலா பதில் | பிளாஷ்பேக்: திகைக்க வைக்கும் 'த்ரில்லர்' திரைப்படத்தின் நாயகனாக எம் என் நம்பியார் நடித்த “திகம்பர சாமியார்” | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ‛பர்ஸ்ட் பன்ச்' எப்படி இருக்கு? | மகுடம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது! | ஷாலின் சோயாவின் இயக்குனர் ஆசை! |
இந்தியத் திரையுலகத்தின் முக்கியமான இயக்குனர்களில் ஒருவர் ராம் கோபால் வர்மா. ஆனால், சமீப காலங்களில் சர்ச்சைக்குரிய படங்களை மட்டுமே எடுத்து வருகிறார். அவருடைய பழைய திறமையை தற்போது பார்க்க முடிவதில்லை.
தமிழ் நடிகரான விஜய் சேதுபதியை, ராம் கோபால் வர்மா சந்தித்துள்ளார். அந்த சந்திப்புக்குப் பின், “அவரை திரையில் பல முறை பார்த்ததற்குப் பிறகு, கடைசியாக நிஜ விஜய் சேதுபதியை நேரில் சந்தித்தேன். அவர் திரையில் இருப்பதை விட நேரில் நல்லவராக இருக்கிறார் என்பதை புரிந்து கொண்டேன்,” எனக் குறிப்பிட்டுள்ளார் ராம் கோபால் வர்மா.
சென்னையில் உள்ள விஜய் சேதுபதியின் அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. ராம்கோபால் வர்மா, விஜய் சேதுபதியை நேரில் வந்து சந்தித்துள்ளது ஆச்சரியமான ஒன்று. இருவரும் இணைந்து புதிய படம் எதையும் செய்யப் போகிறார்களா என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது.