பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
ஆந்திர அரசியலில் தீவிரமாக ஈடுபட்டுள்ள நடிகை ரோஜா, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் அமைச்சராக இருந்து வருகிறார். சமீபத்தில் ஆந்திராவில் லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தல் இரண்டும் ஒரே நாளில் நடைபெற்றது. இந்த தேர்தலிலும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி சார்பில் மீண்டும் நகரி தொகுதியில் வேட்பாளராக போட்டியிட்டு இருக்கிறார் ரோஜா.
இந்நிலையில் இன்று அவர் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். இதையடுத்து அவர் மீடியாக்களை சந்தித்தபோது, ஒவ்வொரு ஆண்டும் அண்ணாமலையார் கோயிலுக்கு வந்து நான் சாமி தரிசனம் செய்து வருகிறேன். நேற்று இரவு கிரிவலம் செய்தேன். இன்று சாமி தரிசனம் செய்திருக்கிறேன். அண்ணாமலையாரின் அருளால் அனைத்து மக்களும் நலமுடன் இருக்க வேண்டும் என்று தான் பிரார்த்தனை செய்ததாக கூறிய ரோஜா, ஆந்திர சட்டசபை தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டி வெற்றி பெற்று மீண்டும் முதல்வர் ஆவார் என்றும் தெரிவித்திருக்கிறார்.