சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் |
ஆந்திர அரசியலில் தீவிரமாக ஈடுபட்டுள்ள நடிகை ரோஜா, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் அமைச்சராக இருந்து வருகிறார். சமீபத்தில் ஆந்திராவில் லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தல் இரண்டும் ஒரே நாளில் நடைபெற்றது. இந்த தேர்தலிலும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி சார்பில் மீண்டும் நகரி தொகுதியில் வேட்பாளராக போட்டியிட்டு இருக்கிறார் ரோஜா.
இந்நிலையில் இன்று அவர் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். இதையடுத்து அவர் மீடியாக்களை சந்தித்தபோது, ஒவ்வொரு ஆண்டும் அண்ணாமலையார் கோயிலுக்கு வந்து நான் சாமி தரிசனம் செய்து வருகிறேன். நேற்று இரவு கிரிவலம் செய்தேன். இன்று சாமி தரிசனம் செய்திருக்கிறேன். அண்ணாமலையாரின் அருளால் அனைத்து மக்களும் நலமுடன் இருக்க வேண்டும் என்று தான் பிரார்த்தனை செய்ததாக கூறிய ரோஜா, ஆந்திர சட்டசபை தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டி வெற்றி பெற்று மீண்டும் முதல்வர் ஆவார் என்றும் தெரிவித்திருக்கிறார்.