மதராஸி ‛கம்பேக்' கொடுக்கும் படமாக இருக்கும் என்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ் | 'ஏஸ்' தோல்வியிலிருந்து ஏறி வந்த விஜய் சேதுபதி | ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் | வாடகை வீட்டில் வசிப்பது ஏன் ? பாலிவுட் நடிகர் அனுபம் கெர் ஆச்சரிய விளக்கம் | அஜித்தை வைத்து ஆக்ஷன் படம் இயக்க லோகேஷ் கனகராஜ் ஆசை | ராஷ்மிகாவின் மைசா படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது | பிளாஷ்பேக் : வரிசை கட்டிவந்த யுத்த பிரச்சாரத் திரைப்படங்கள் | அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிப்பதை உறுதி செய்த லோகேஷ் கனகராஜ் | வெற்றிமாறன், சிம்பு படத்தின் புதிய அப்டேட் | ஆகஸ்ட் 1ல் பல படங்கள் போட்டி.. |
தமிழ் சினிமாவில் யதார்த்த இயக்குனர்களில் ஒருவர் ஜெயபாரதி, முதன் முதலான சென்னை சேரிப்பகுதி மக்களின் வாழ்க்கையை 'குடிசை' என்ற பெயரில் திரைப்படமாக இயக்கியதால் 'குடிசை ஜெயபாரதி' என்றே இப்போதும் அழைக்கப்படுகிறார்.
ஆரம்பத்தில் சினிமா விமர்சகராக இருந்த ஜெயபாரதி கே.பாலச்சந்தரின் படங்களை கடுமையாக விமர்சித்து வந்தார். ஒரு நாள் ஜெயபாரதியை அழைத்து கடிந்து கொண்ட கே.பாலச்சந்தர் “நல்ல படம் எடுக்கிறது எப்படின்னு எனக்கு சொல்லித் தரமுடியுமா?” என்று கோபமாக கேட்டார். “சொல்லித் தருவதென்ன எடுத்து காட்டுகிறேன்” என்று சவால்விட்டு கிரவுண்ட் பண்டிங் முறையில் அவர் எடுத்த படம்தான் 'குடிசை'.
அதன்பிறகு ஒரு நாள் அவரை அழைத்து பாராட்டிய கே.பாசலச்சந்தர். “சொன்ன மாதிரியே செஞ்சு காட்டிட்டியே” என்று பாராட்டினார். அந்த படத்தின் சாயலில்தான் அவர் 'தப்பு தாளங்கள்' படத்தை பின்னாளில் இயக்கினார். இதனால் கே.பாலச்சந்தருக்கும் ஜெயபாரதிக்கும் ஆழமான நட்பு ஏற்பட்டது.
ஒருமுறை “உன்னோட கண்கள் தீர்க்கமானவை. நீ ஏன் என் படத்தில் நடிக்கக் கூடாது? ரெண்டு ஸ்டில்ஸ் எடுத்துட்டுவா” என்றார். ஆனால் ஜெயபாரதி அதை சீரியசாக எடுத்துக் கொள்ளவில்லை. “நான் உங்கள் படத்தை விமர்சிப்பதில் இருந்தும், நான் படம் இயக்குவதில் இருந்தும் என்னை திசை திருப்ப பார்க்கிறீர்கள்” என்று கூறிவிட்டு சென்று விட்டார்.
அந்த படம் 'மூன்று முடிச்சு'. ஜெயபாரதி மறுத்து ஒதுங்கியதால் ரஜினி நடித்தார். வருமானம் இல்லாவிட்டாலும் தன்மானத்தை விட்டுக் கொடுக்காத ஜெயபாரதிக்கு இன்று 75வது பிறந்த நாள்.