இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
தங்கலான் படத்தை அடுத்து தற்போது அருண்குமார் இயக்கும் வீர தீர சூரன் என்ற படத்தில் நடித்து வருகிறார் விக்ரம். இப்படத்தில் அவருடன் எஸ்.ஜே.சூர்யா, துஷாரா விஜயன், சுராஜ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். இந்த படத்தின் டைட்டில் டீசர் விக்ரமின் பிறந்தநாளில் வெளியானது. அப்போது வெளியான போஸ்டரில், இரண்டு கையிலும் இரண்டு அரிவாள்களை வைத்தபடி ஆவேசமாக நின்று கொண்டிருக்கிறார் விக்ரம். இந்த போஸ்டருக்கு எதிராக சமூக ஆர்வலர் ஒருவர் போலீசில் புகார் அளித்திருக்கிறார்.
அந்த புகாரில், சமீபகாலமாக இளைஞர்கள் கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. இந்த நேரத்தில் விக்ரம் நடித்திருக்கும் வீர தீர சூரன் படத்தின் போஸ்டரில் இரண்டு கையிலும் இரண்டு அரிவாள்களை வைத்துக் கொண்டு நிற்கிறார். இது போன்ற போஸ்டர்கள் இன்றைய இளைய தலைமுறையை வெகுவாக பாதிக்கும். அவர்கள் மனதில் வன்முறை எண்ணங்களை தூண்டிவிடும். எனவே இப்படி விக்ரம் அரிவாளுடன் நிற்கும் புகைப்படத்தை வெளியிட்ட படக்குழு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.