‛கில்லர்' முதல்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு ‛ஜெயிலர்-2'வில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | காரில் கோளாறு: ஷாரூக்கான், தீபிகா படுகோனே மீது வழக்கு | ‛வார் - 2' படம் தோல்வி அடைந்ததால் ஜூனியர் என்டிஆரின் அடுத்த படத்தை கைவிட்ட நிறுவனம்! | எனது சொகுசு பங்களா வீடியோவை உடனே நீக்குங்கள்! - ஆலியா பட் வைத்த ஆவேச கோரிக்கை | 23 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் ‛ரன்' | சிவகார்த்திகேயனுக்கு போட்டியா : ‛கேபிஒய்' பாலா பதில் | பிளாஷ்பேக்: திகைக்க வைக்கும் 'த்ரில்லர்' திரைப்படத்தின் நாயகனாக எம் என் நம்பியார் நடித்த “திகம்பர சாமியார்” | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ‛பர்ஸ்ட் பன்ச்' எப்படி இருக்கு? | மகுடம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது! | ஷாலின் சோயாவின் இயக்குனர் ஆசை! |
கடந்த வருடம் பொன்னியின் செல்வன், லியோ, ரோடு என அடுத்தடுத்த படங்களை கொடுத்து மீண்டும் திரையுலகில் ஒரு விறுவிறுப்பான பயணத்தை தொடங்கியுள்ளார் த்ரிஷா. இந்த வருடமும் தமிழில் அஜித்துடன் விடாமுயற்சி, கமலுடன் தக் லைப், தெலுங்கில் சிரஞ்சீவியுடன் விஸ்வம்பரா உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். அது மட்டுமல்ல மலையாளத்தில் டொவினோ தாமஸ் ஜோடியாக ஐடென்டிட்டி என்கிற படத்திலும் நடித்து வருகிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் கடந்த சில நாட்களாக ஈரோட்டில் இதன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. த்ரிஷா இங்கே படப்பிடிப்பில் கலந்து கொள்வதை கேள்விப்பட்டு ஏராளமான ரசிகர்கள் த்ரிஷாவை பார்ப்பதற்காக அவரது கேரவன் முன்பாக கூடினார்கள். அவரும் கேரவனில் இருந்தபடி ரசிகர்களுக்கு கை காண்பித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இது குறித்து வீடியோ ஒன்றும் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.