25வது நாளில் அடியெடுத்து வைத்த 'டூரிஸ்ட் பேமிலி' | ஹீரோக்களின் உதவியாளர்கள் கதை கேட்பதை முதலில் நிறுத்த வேண்டும் ; ஆர்கே செல்வமணி காட்டம் | தெலுங்கு படத்தில் சூப்பர் ஸ்டார் கதாபாத்திரத்தில் நடிக்கும் உபேந்திரா | எனக்குள் புதிய விடியலை திறந்து விட்ட ஓஷோவின் பேச்சு ; மோகன்லால் | என் விளக்கத்தை அக்ஷய் குமார் படித்தால் பிரச்னை முடிவுக்கு வந்துவிடும் ; படத்திலிருந்து விலகிய நடிகர் பதில் | 'அஞ்சலி' படம் பார்த்து அழுத சிலம்பரசன் | பிரபாஸ் அமைதியானவர் அல்ல, கலகலப்பானவர்! -மாளவிகா மோகனன் | உருவ கேலி செய்தவர்களுக்கு ஐஸ்வர்யா ராய் கொடுத்த பதிலடி! | திரைப்படங்களை திருட்டுப் பதிவிறக்கம் செய்யாதீர்கள்! - நடிகர் சூரி வேண்டுகோள் | மந்தமான வசூலில் விஜய் சேதுபதியின் ‛ஏஸ்' |
தமிழகத்தில் நாளை லோக்சபா தேர்தல் நடைபெறும் நிலையில் இறுதி பிரச்சாரம் நேற்று நடந்தது. வேலூர் தொகுதியில் போட்டியிடும் நடிகர் மன்சூரலிகான் குடியாத்தம் பகுதியில் உள்ள கிராமங்களில் பிரச்சாரம் செய்து வந்தார். அப்போது நெஞ்சு வலிப்பதாக அவர் சொன்னதை எடுத்து அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அதையடுத்து சென்னை கொண்டு வரப்பட்டு மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இந்நிலையில் மன்சூரலிகான் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், குடியாத்தம் சந்தையில் இருந்து திரும்பிய போது ஒரு இடத்தில் கட்டாயப்படுத்தி என்னை பழ ஜூஸ் குடிக்க சொன்னார்கள். அதன் பிறகு மோர் கொடுத்தார்கள். அவற்றை குடித்த உடனே மயக்கம் வந்தது. அடி நெஞ்சு தாங்க முடியாத அளவுக்கு வலித்தது. அதை அடுத்து என்னை பாலாறு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை கொடுத்தார்கள். ஆனாலும் வலி அதிகமாகவே இருந்தது. அதன் பிறகு தான் ஆம்புலன்சில் சென்னைக்கு கூட்டிட்டு வந்து ஐசியுவில் அட்மிட் செய்து சிகிச்சை கொடுத்த பிறகு இப்போது வலி குறைந்து இருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார் .
மன்சூரலிகானுக்கு நுரையீரல் வலி போக விஷ முறிவு ட்ரிப்ஸ் கொடுக்கப்பட்டதாகவும், அதன் பிறகே வலி குறைந்ததாகவும், இன்று அவர் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.