பயணம் எளிதல்ல! ; மங்காத்தா நடிகைக்கு அஜித் சொன்ன அட்வைஸ் | பழம்பெரும் நடிகையான ‛கன்னடத்து பைங்கிளி' சரோஜாதேவி காலமானார் | சுரேஷ்கோபி படத்துக்கு ஒரு வழியாக யு/ஏ சான்றிதழ் கொடுத்த சென்சார் | அல்லு அர்ஜுன் - அட்லி படத்தில் நெகட்டிவ் ரோலில் ராஷ்மிகா மந்தனா? | மீண்டும் காப்பி சர்ச்சையில் சிக்கிய அனிருத்! | வேள்பாரி நாவல்: ஷங்கருக்கு எதிராக வெளியான ட்ரோல்கள்! | விஜய் சேதுபதி படத்தில் வில்லி வேடத்தில் தபு! | ஐபிஎல் போட்டி நேரத்திற்கு இணையாக ‛பாகுபலி தி எபிக்' ரன்னிங் டைம் | மோகன்லால் உடன் நடிக்க விருப்பம்: நடிகை ஷில்பா ஷெட்டி | விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி |
தமிழகத்தில் நாளை லோக்சபா தேர்தல் நடைபெறும் நிலையில் இறுதி பிரச்சாரம் நேற்று நடந்தது. வேலூர் தொகுதியில் போட்டியிடும் நடிகர் மன்சூரலிகான் குடியாத்தம் பகுதியில் உள்ள கிராமங்களில் பிரச்சாரம் செய்து வந்தார். அப்போது நெஞ்சு வலிப்பதாக அவர் சொன்னதை எடுத்து அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அதையடுத்து சென்னை கொண்டு வரப்பட்டு மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இந்நிலையில் மன்சூரலிகான் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், குடியாத்தம் சந்தையில் இருந்து திரும்பிய போது ஒரு இடத்தில் கட்டாயப்படுத்தி என்னை பழ ஜூஸ் குடிக்க சொன்னார்கள். அதன் பிறகு மோர் கொடுத்தார்கள். அவற்றை குடித்த உடனே மயக்கம் வந்தது. அடி நெஞ்சு தாங்க முடியாத அளவுக்கு வலித்தது. அதை அடுத்து என்னை பாலாறு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை கொடுத்தார்கள். ஆனாலும் வலி அதிகமாகவே இருந்தது. அதன் பிறகு தான் ஆம்புலன்சில் சென்னைக்கு கூட்டிட்டு வந்து ஐசியுவில் அட்மிட் செய்து சிகிச்சை கொடுத்த பிறகு இப்போது வலி குறைந்து இருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார் .
மன்சூரலிகானுக்கு நுரையீரல் வலி போக விஷ முறிவு ட்ரிப்ஸ் கொடுக்கப்பட்டதாகவும், அதன் பிறகே வலி குறைந்ததாகவும், இன்று அவர் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.