சிம்பு நடிக்க இருந்த படத்தில் ரஜினியா? | மகனுக்கு அன்பு முத்தம் கொடுக்கும் நயன்தாரா! லைக்ஸ்களை அள்ளும் புகைப்படம்!! | பாடகி சுசித்ரா மீது கொச்சின் போலீசில் புகார்! | இன்ஸ்டா கணக்கை மீட்டெடுத்த ஜெயம் ரவி | திருவருள், மன்மதன், கொம்பன் - ஞாயிறு திரைப்படங்கள் | மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் |
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு தெலுங்கில் அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன படம் புஷ்பா. இதன் முதல் பாகம் புஷ்பா : தி ரைஸ் என்கிற பெயரில் வெளியானது. இரண்டாம் பாகம் தற்போது புஷ்பா : தி ரூல் என்கிற பெயரில் தயாராகி வருகிறது. வரும் ஆகஸ்ட் 15ம் தேதி இந்த படம் வெளியாக இருக்கிறது. இதில் கதாநாயகியாக ஸ்ரீ வள்ளி என்கிற கதாபாத்திரத்தில் ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார்.
முதல் பாகத்தில் அவர் சாமி சாமி என்கிற பாடலுக்கு ஆடிய நடனம் அவரை பட்டி தொட்டி எங்கும் கொண்டு போய் சேர்த்தது. இந்த நிலையில் இந்த இரண்டாம் பாகத்தில் நடித்துள்ளது குறித்து சமீபத்தில் ராஷ்மிகா கூறும்போது, “முதல் பாகத்தில் நான் நடிக்கும்போது இதன் கதை, என் கதாபாத்திரம் குறித்த பெரிய புரிதல் இல்லாமல் தான் தயாரானேன். ஆனால் இந்த இரண்டாம் பாகத்தில் ஸ்ரீ வள்ளி யார் என முழுமையாக புரிந்து கொண்டு நடித்து இருக்கிறேன். இந்த படம் வெளியாகும்போது இதில் என்னை ஸ்ரீவள்ளி 2.0 ஆக பார்க்கலாம்” என்று நம்பிக்கையுடன் கூறியுள்ளார்.