கலகலப்பு 3ம் பாகத்தில் மீண்டும் விமல்? | லப்பர் பந்து இயக்குனரின் அடுத்த படத்தை தயாரிக்கும் தனுஷ் பட தயாரிப்பாளர்! | மெய்யழகன் படத்துடன் இணைந்த சர்தார் 2! | நேருக்கு நேர் மோதும் அஜித், சூர்யா படங்கள்! | படுகவர்ச்சியாக புகைப்படம் வெளியிட்ட ஜெனிபர் | ஜுனியர் என்டிஆருக்கு வாழ்த்து சொன்ன பவன் கல்யாண் | தெலுங்கு பட ஷூட்டிங்கில் ரச்சிதா மகாலெட்சுமி | 'சத்யா' காட்சியைப் பகிர்ந்து கவியூர் பொன்னம்மாவுக்கு கமல்ஹாசன் இரங்கல் | சுதா சந்திரன் பிறந்தநாளை கொண்டாடிய சீரியல் குழுவினர் | சீக்கிரமே அசைவம் சாப்பிடுவதை நிறுத்திவிடுவேன் - ராஜலெட்சுமி பேட்டி |
சென்னை : தன் மகன் விஜய்யை, புஸ்ஸி ஆனந்த் ஏமாற்றுவதாக எஸ்.ஏ.சந்திரசேகர் குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் புதிய கட்சியை நடிகர் விஜய் துவக்கியுள்ளார். இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்வதற்கு, பிப்., மாதம் 2ம் தேதி விண்ணப்பம் வழங்கப்பட்டது. இதுவரை கட்சி பதிவு செய்யப்பட்டதா என்ற விவரம் வெளியாகவில்லை. கட்சிக்கு இரண்டு கோடி உறுப்பினர்கள் சேர்க்கப்படுவர் என்று அறிவிக்கப்பட்டது. இதற்காக, மொபைல் போன் செயலியும் மார்ச்சில் அறிமுகம் செய்யப்பட்டது.
ஒரே வாரத்தில் 50 லட்சம் உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அதன்பின், உறுப்பினர் சேர்க்கை என்னவானது என்ற விபரம் வெளியிடப்படவில்லை. இது, ரசிகர்கள் மத்தியில் விரக்தியை ஏற்படுத்திஉள்ளது.
இந்நிலையில், கட்சியின் பொதுச்செயலர் புஸ்ஸி ஆனந்த், நடிகர் விஜயை ஏமாற்றுவதாக, விஜயின் தந்தை சந்திரசேகர் பேசிய வீடியோ, சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.
அதில், சந்திரசேகர் கூறியிருப்பதாவது: புஸ்ஸி ஆனந்த், ஒரு சமூக வலைதள பக்கத்தை வைத்துள்ளார். இதில், விஜய் உட்பட 50 பேர் உள்ளனர். அதில், கட்சிக்காக புஸ்ஸி ஆனந்த் கஷ்டப்படுவது போன்ற பதிவுகள் போடப்படுகின்றன. அதை பலரும், 'லைக்' செய்கின்றனர். இதை பார்த்து, புஸ்ஸி ஆனந்த் கடுமையாக உழைப்பதாக விஜய் நம்பிக் கொண்டிருக்கிறார். விஜய்யை ஏமாற்றுகின்றனர்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இது குறித்து, த.வெ.க., நிர்வாகிகளிடம் கேட்டபோது, ‛‛இந்த வீடியோ எப்போது எடுக்கப்பட்டது என்று தெரியவில்லை. இதற்கு நாங்கள் பதில் சொல்ல முடியாது. உரிய நேரத்தில் விஜய் பதில் அளிப்பார்'' என்றனர்.