ஒரே மாதத்தில் திரைக்கு வரும் கிர்த்தி ஷெட்டியின் மூன்று படங்கள் | 100 பேர் வந்தாலும்....! பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத்தின் டிரைலர் வெளியானது! | ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் இணையும் முன்னனி நடிகைகள் | இம்மாதத்தில் ஓடிடியில் வெளியாகும் 'லோகா, இட்லிகடை' | 500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு |
கடந்த சில தினங்களுக்கு முன்பு ரசிகர்கள் யாருமே எதிர்பாராத திடீர் சர்ப்ரைஸாக கார்த்திக் சுப்பராஜ் டைரக்ஷனில் சூர்யா நடிக்கும் படத்தின் அறிவிப்பு வெளியானது. கார்த்திக் சுப்பராஜை பொறுத்தவரை சில வருடங்கள் விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா இவர்களுடனேயே பயணித்தவர் திடீரென ‛பேட்ட' படம் மூலமாக யு டர்ன் எடுத்து ரஜினியை இயக்கும் அளவுக்கு உயர்ந்தார். அதன்பிறகு அவர் விஜய், அஜித் என முதல் நிலை ஹீரோக்களின் படங்களாக இயக்குவார் என்று நினைத்தால் தனுஷ், விக்ரம் என வேறு ரூட்டில் பயணிக்க துவங்கி விட்டார்.
இந்த நிலையில் தான் சூர்யாவை வைத்து அவர் படம் இயக்கப் போகிறார் என்கிற எந்த தகவலும் இதுவரை வெளியாகாத நிலையில் இந்த அறிவிப்பு வெளியானதால் இது ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது.
அதே சமயம் கார்த்திக் சுப்புராஜ் இந்த படத்தின் கதையை எழுதி விட்டு இரண்டு மூன்று ஹீரோக்களை மனதில் வைத்துக் கொண்டு, அது சூர்யாவுக்கும் பொருத்தமாக இருக்கும், ஒருவேளை அவர் இல்லாவிட்டால் இன்னொருவர் என்கிற நோக்கில் அவர் சூர்யாவை அணுகவில்லையாம்.. இரண்டு வருடங்களுக்கு முன்பே சூர்யாவுக்காக ஒரு ஒன்லைன் தயார் செய்து அவரிடம் கூறியபோது நன்றாக இருக்கிறது இதை முழுதாக டெவலப் பண்ணுங்கள் என சூர்யா கிரீன் சிக்னல் கொடுத்து விட்டாராம்.
அதற்கடுத்து கார்த்திக் சுப்பராஜூம் சூர்யாவும் அவரவர் படங்களில் பிஸியாகிவிட்டனர். தற்போது ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் முடித்த பிறகு சூர்யாவுக்கான கதையை முழுவதும் சூர்யாவை மனதில் வைத்தே உருவாக்கியுள்ளாராம் கார்த்திக் சுப்பராஜ். அதிகாரப்பூர்வமாக இந்த படம் அறிவிக்கப்படும் வரை இந்த தகவல் வெளியே கசிய கூடாது என இரு தரப்பிலும் ரகசியம் காத்து அதை சாதித்தும் இருக்கிறார்கள்.