2026 கோடை விடுமுறையில் திரைக்கு வரும் விஷாலின் 'மகுடம்'! | காதலருடன் பிரேக்ப்பா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரியா பவானி சங்கர்! | அருள் நிதியின் 'டிமான்டி காலனி -3' படத்தின் போஸ்டர் வெளியானது! | வித் லவ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | புத்தாண்டு பிறந்தாச்சு..... ஓடிடியில் புதுப்படங்களும் வரிசை கட்ட ஆரம்பிச்ச்சாச்சு....! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை வெளியீடு | 'சல்லியர்கள்' படத்தை திரையிட தியேட்டர் இல்லை: தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வேதனை | ரஜினிகாந்த்தின் ஆசைகள் 2026ல் நிறைவேறுமா? | இளையராஜா இசையில் பாடிய அறிவு, வேடன் | சென்னை பெரம்பூர் பின்னணி கதையில் ரோஜா |

கடந்த சில தினங்களுக்கு முன்பு ரசிகர்கள் யாருமே எதிர்பாராத திடீர் சர்ப்ரைஸாக கார்த்திக் சுப்பராஜ் டைரக்ஷனில் சூர்யா நடிக்கும் படத்தின் அறிவிப்பு வெளியானது. கார்த்திக் சுப்பராஜை பொறுத்தவரை சில வருடங்கள் விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா இவர்களுடனேயே பயணித்தவர் திடீரென ‛பேட்ட' படம் மூலமாக யு டர்ன் எடுத்து ரஜினியை இயக்கும் அளவுக்கு உயர்ந்தார். அதன்பிறகு அவர் விஜய், அஜித் என முதல் நிலை ஹீரோக்களின் படங்களாக இயக்குவார் என்று நினைத்தால் தனுஷ், விக்ரம் என வேறு ரூட்டில் பயணிக்க துவங்கி விட்டார்.
இந்த நிலையில் தான் சூர்யாவை வைத்து அவர் படம் இயக்கப் போகிறார் என்கிற எந்த தகவலும் இதுவரை வெளியாகாத நிலையில் இந்த அறிவிப்பு வெளியானதால் இது ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது.
அதே சமயம் கார்த்திக் சுப்புராஜ் இந்த படத்தின் கதையை எழுதி விட்டு இரண்டு மூன்று ஹீரோக்களை மனதில் வைத்துக் கொண்டு, அது சூர்யாவுக்கும் பொருத்தமாக இருக்கும், ஒருவேளை அவர் இல்லாவிட்டால் இன்னொருவர் என்கிற நோக்கில் அவர் சூர்யாவை அணுகவில்லையாம்.. இரண்டு வருடங்களுக்கு முன்பே சூர்யாவுக்காக ஒரு ஒன்லைன் தயார் செய்து அவரிடம் கூறியபோது நன்றாக இருக்கிறது இதை முழுதாக டெவலப் பண்ணுங்கள் என சூர்யா கிரீன் சிக்னல் கொடுத்து விட்டாராம்.
அதற்கடுத்து கார்த்திக் சுப்பராஜூம் சூர்யாவும் அவரவர் படங்களில் பிஸியாகிவிட்டனர். தற்போது ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் முடித்த பிறகு சூர்யாவுக்கான கதையை முழுவதும் சூர்யாவை மனதில் வைத்தே உருவாக்கியுள்ளாராம் கார்த்திக் சுப்பராஜ். அதிகாரப்பூர்வமாக இந்த படம் அறிவிக்கப்படும் வரை இந்த தகவல் வெளியே கசிய கூடாது என இரு தரப்பிலும் ரகசியம் காத்து அதை சாதித்தும் இருக்கிறார்கள்.