இப்ப, தமிழ் சினிமாவில் டாப் 5 ஹீரோயின் யார் தெரியுமா? | சூர்யாவின் ‛கருப்பு' ரிலீஸ் எப்போது? | ராஷ்மிகாவின் ‛மைசா' படத்தில் இணையும் புஷ்பா 2 வில்லன் | பராசக்தி படப்பிடிப்பு முடிவடைந்தது | நவம்பர் 21-ல் ரீரிலீஸ் ஆகும் ப்ரண்ட்ஸ் | லாபத்தில் முதலில் நுழைந்த 'பைசன்' | தீபாவளிக்கு ஜனநாயகன் அப்டேட் ஏனில்லை | பொங்கலுக்கு நடிகர் சங்க கட்டடம் திறப்பு : விஷால் திருமணம் எப்போது | பிக்பாஸில் வந்து விட்டால் மட்டும் நடிகையாகி விட முடியாது: தர்ஷிகா | ஹீரோயின் ஆனார் 'அரண்மனை' ஹர்ஷா |
துப்பாக்கி படத்தில் வில்லனாக நடித்தது மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பிரபலமானவர் வித்யூத் ஜம்வால். இதையடுத்து தமிழில் 'அஞ்சான்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதன் பிறகு அவர் தமிழில் எந்த படத்திலும் நடிக்கவில்லை. ஆனால், ஹிந்தியில் குறிப்பிட்ட ஒரு சில படங்களில் மட்டும் நடித்து வருகிறார்.
தற்போது இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் தனது 23வது படத்தில் நடித்து வருகிறார். இதில் கதாநாயகியாக ருக்மணி வசந்த் நடிக்கிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தை ஸ்ரீ லஷ்மி மூவிஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர்.
ஏற்கனவே இதன் படப்பிடிப்பு சென்னை, பாண்டிச்சேரி போன்ற பகுதிகளில் நடைபெற்று வந்தது. இப்போது இந்த படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் வித்யூத் ஜம்வால் நடித்து வருகிறார் என கூறப்படுகிறது.