ஓடிடியில் நேரடியாக வெளியான தீபாவளி படம் | பிளாஷ்பேக்: ஸ்ரீதேவி தான் வேண்டும் என்று அடம்பிடித்த ரஜினி | பிளாஷ்பேக் : 'மனோகரா' கதை ஷேக்ஸ்பியர் எழுதியது | ஒரே நேரத்தில் இரு லட்சுமிகாந்தன் கொலை வழக்கு படமா? | சூப்பர் மாரி சூப்பர் : ‛பைசன்' படத்திற்கு ரஜினி பாராட்டு | ‛பரிசு' : லட்சியத்திற்காக போராடும் பெண்ணின் கதை | ஒரு ‛என்' சேர்த்தால், வாழ்க்கை மாறிடுமா? : ஹன்சிகாவின் ஆசை | தெலுங்கில் 100 கோடி வசூலித்த 'காந்தாரா சாப்டர் 1' | 'கப்ஜா' படத்தால் 'இன்ஸ்பயர்' ஆன 'ஓஜி' : இயக்குனர் கருத்தால் சர்ச்சை | விஜய்யின் 'முரசு' படம் நின்று போக இப்படி ஒரு காரணமா ? 20 வருடம் கழித்து வெளியான தகவல் |
இயக்குனர் ஹரி, சூர்யா கூட்டணியில் வெளியான 'சிங்கம்' படங்கள் பெரும் வரவேற்பை பெற்றது. முதல் இரண்டு பாகங்கள் பெற்ற வரவேற்றை 3வது பாகம் பெறவில்லை. இதனால் அதன் நான்காம் பாக கதை தயாராக இருந்தும் சூர்யா நடிக்காமல் ஒதுங்கினார். ஹரி, சூர்யா இருவருக்கும் கருத்து வேறுபாடு இருப்பதாகவும் கூறப்பட்டது. இதனால் சிங்கம் 4 கைவிடப்பட்டது.
இதுகுறித்து ஹரி கூறியிருப்பதாவது: நான் எங்கு சென்றாலும் சிங்கம் 4 பற்றித்தான் கேட்கிறார்கள். சிங்கம் ஹாட்ரிக் வெற்றி கொடுத்த படம். அதனால் அடுத்த படத்திற்கு அதிக உழைப்பும், யோசிப்பும் வேண்டும். எனக்கும் சூர்யாவுக்கும் எந்த பிரச்சினையும் இல்லை. அருவா கதை அப்படியே இருக்கிறது. அது எப்போது வேண்டுமானாலும் தொடங்கும். சிங்கம் 4 பற்றி காலம்தான் பதில் சொல்லணும். நான் இப்போது ரத்னம் படத்தில் பிசியாக இருக்கிறேன். எனது வழக்கமான பாணியிலான பக்கா ஆக்ஷன் படம் இது. விஷால் இதில் வேற மாதிரி வந்து நிற்பார். என்றார்.