சூர்யவம்சம் 2ம் பாகம் உருவாகிறது? | தமிழில் அறிமுகமாகும் ராப் பாடகர் வேடன் | உடலை வருத்தும் சிம்பு | தனுஷ் பிறந்தநாளில் புதுப்பொலிவுடன் ரீ-ரிலீஸ் ஆகும் ‛புதுப்பேட்டை' | ஸ்டன்ட் காட்சியில் ஒருவர் உயிரிழப்பு : இயக்குனர் பா.ரஞ்சித் மீது வழக்கு பதிவு | ரஜினி ரசிகர்களுக்கு நேற்று முக்கியமான நாள் : அப்படி என்ன சிறப்பு தெரியுமா? | மகன் மீதான தாக்குதல் : மறைமுகமாக பதிலடி கொடுத்த விஜய்சேதுதி | அடுத்தடுத்து 3 படங்கள்... சம்பளம் 100 கோடி : சிவகார்த்திகேயன் மார்க்கெட் விரிவடைகிறது | ஜுலை 18ல் இத்தனை படங்கள் வெளியீடா….??? | மலேசியாவில் இருந்து சென்னை திரும்பினார் பாரதிராஜா : பாராட்டு விழா எப்போது? |
தமிழில் சைத்தான், கன்னி ராசி உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் மலையாள நடிகை அருந்ததி நாயர். திருவனந்தபுரத்தில் வசித்து வரும் இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது சகோதரர்களுடன் இருசக்கர வாகனத்தில் சென்றபோது விபத்தில் சிக்கினார். தொடர்ந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு வென்டிலேட்டர் உதவியுடன் உயிருக்கு போராடி வருகிறார். இவருக்கு அடுத்ததாக மூளை அறுவை சிகிச்சை செய்யப்பட இருக்கிறது என்றும் சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் அறுவை சிகிச்சை உள்ளிட்ட மருத்துவ செலவுகளுக்காக அருந்ததி நாயரின் குடும்பம் மிகப்பெரிய அளவில் சிரமப்படுவதாகவும் இதற்காக அவர்களுக்கு மிகப்பெரிய அளவில் பண உதவி தேவைப்படுவதாகவும் மலையாள திரை உலகை சேர்ந்த ரம்யா ஜோசப் என்கிற நடிகை சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
இதுவரை திரையுலகத்தில் இருந்து யாரும் அருந்ததியின் மருத்துவ செலவிற்காக நிதி உதவி செய்யவில்லை என்பதுடன் ஒருவர் கூட அவரது உடல்நிலை எப்படி இருக்கிறது என்று கடந்த ஐந்து நாட்களாக விசாரிக்க கூட இல்லை என்று தனது வருத்தத்தையும் வெளிப்படுத்தியுள்ளார் ரம்யா ஜோசப்.