நீண்ட இடைவெளிக்குப் பிறகு வெளியாகும் 'அடங்காதே' | ஹரிஹர வீரமல்லு : காட்சிகள் குறைப்பு | 3 நாளில் 20 கோடியை அள்ளிய 'தலைவன் தலைவி': மகாராஜா மாதிரி 100 கோடியை தாண்டுமா? | 24 ஆண்டுகளுக்குபின் ஆளவந்தான் நாயகி: விஜய் ஆண்டனியின் 'லாயர்' படத்தில் நடிக்கிறார் | கோலிவுட்டில் கணிசமாக குறைந்த பார்ட்டிகள்: ஸ்ரீகாந்த், அமீர், கிருஷ்ணா எதிர்காலம்? | சிவகார்த்திகேயன் வெளியிடும் ஹவுஸ்மேட்ஸ்: பேய் படமா? வேறுவகை ஜானரா? | மதராஸி ‛கம்பேக்' கொடுக்கும் படமாக இருக்கும் என்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ் | 'ஏஸ்' தோல்வியிலிருந்து ஏறி வந்த விஜய் சேதுபதி | ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் | வாடகை வீட்டில் வசிப்பது ஏன் ? பாலிவுட் நடிகர் அனுபம் கெர் ஆச்சரிய விளக்கம் |
மலையாளத்தில் கடந்த மாதம் வெளியான சின்ன பட்ஜெட் படங்களாகட்டும், மம்முட்டி நடித்த பிரம்மயுகம் போன்ற பெரிய பட்ஜெட் படமாகட்டும் அனைத்துமே வரவேற்புடன் ஓடிக் கொண்டிருக்கின்றன. இதனை தொடர்ந்து அடுத்ததாக ரசிகர்கள் எதிர்பார்ப்பில் இருக்கும் படம் ஆடுஜீவிதம்.
பிரித்விராஜ் நடிப்பில் உருவாகியுள்ள இந்த படம் வரும் மார்ச் 28ம் தேதி வெளியாக இருக்கிறது. இயக்குனர் பிளஸ்சி இயக்கியுள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த படத்தின் மூலம் அவர் மீண்டும் மலையாள திரையுலகில் அடியெடுத்து வைத்துள்ளார்.
தென்னிந்திய மொழிகளிலும் ஹிந்தியிலும் சேர்த்து ஐந்து மொழிகளில் இந்த படம் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் இடம்பெறும் 'நின்னே கிணாவும் காணும்' என்கிற பாடலை பாடகர் விஜய் யேசுதாஸுடன் இணைந்து பாடியுள்ளார் பின்னணிப் பாடகி சின்மயி. மலையாளத்தில் மட்டுமில்லாது வெளியாகும் ஐந்து மொழிகளிலும் சின்மயியே இந்த பாடலை பாடியுள்ளார்.
ஆனால் இந்த பாடல்கள் அனைத்துமே படம் துவங்கப்பட்ட சமயத்தில் அதாவது ஆறு வருடங்களுக்கு முன்பே பதிவு செய்யப்பட்டது என்கிற தகவலையும் கூறியுள்ள சின்மயி, இந்த படத்திற்காக முதன் முதலில் பதிவு செய்யப்பட்ட பாடல் இதுதான் என்றும், இந்த வாய்ப்பு கிடைப்பதற்கு நான் பெருமைப்படுகிறேன் என்றும் தனது சோசியல் மீடியா பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.