தெலுங்கானா மாநில சினிமா விருதுகள்: நேரில் விருது பெற்ற அல்லு அர்ஜுன் | அப்பாவை அப்படி பார்த்தது மகிழ்ச்சி: கீர்த்திபாண்டியன் நெகிழ்ச்சி | கவிஞர்.நா.முத்துக்குமார் இசைச்கச்சேரி: கமல்ஹாசன், சிவகார்த்திகேயன் பங்கேற்பு | மணிரத்னத்தை மறுத்தாரா ரஜினி? | விரைவில் இயக்குனராகும் பார்த்திபன் மகன் ராதாகிருஷ்ணன் | தயாராகிறார் அடுத்த கேப்டன் | நட்பு வட்டார படங்களில் நடிப்பு: புலம்பும் நடிகை | கலையும் கருணையும்... அருண்மொழி தேவன் | நடிப்பு, பாட்மின்டன் ஸ்ரீசுவேதா-வின் விருப்பங்கள் | காதோடு தான் பேசுவேன்...! குரலுக்கு ஒரு கோபிகா |
விஜய் டிவியில் ஒளிபரப்பான ஆபிஸ் தொடரில் நடித்து மிகவும் பிரபலமானவர் மதுமிலா. தொடர்ந்து வெள்ளித்திரையில் பூஜை, ரோமியோ ஜூலியட், மாப்பிள்ளை சிங்கம் உள்ளிட்ட சில படங்களில் நடித்திருந்தார். மதுமிலாவுக்கு ரசிகர்களிடம் இருந்து வரவேற்புக்கு கண்டிப்பாக பெரிய நடிகையாக வலம் வருவார் என்று பலரும் நம்பினர். ஆனால், மதுமிலா கனடாவை சேர்ந்த நபரை திருமணம் செய்து கொண்டு வெளிநாட்டிலேயே செட்டிலாகிவிட்டார். அவருக்கு ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில் தற்போது பிரபலமான மேக்கப் ஆர்ட்டிஸ்ட்டாக கலக்கி வருகிறார்.
அவர் அண்மையில் அளித்த பேட்டியில் நடிப்புக்கு எப்போது கம்பே? எதற்காக இவ்வளவு பெரிய கேப்? என்றெல்லாம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த மதுமிலா, ‛‛கேப் என்றெல்லாம் இல்லை ரிட்டையர்ட் தான். நடிப்பதை நிறுத்திவிட்டு தான் திருமணம் செய்து கொண்டேன்'' என பளீச் பதில் அளித்துள்ளார். மதுமிலா கம்பே கொடுப்பார் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு அவரது பதில் சற்று ஏமாற்றத்தை தந்துள்ளது.