நிவின்பாலியின் 'சர்வம் மாயா' ரிலீஸ் தேதி அறிவிப்பு | தவப்புதல்வன், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ஆதிபுருஷ் - ஞாயிறு திரைப்படங்கள் | பாலிவுட்டில் அறிமுகமாகும் மீனாட்சி சவுத்ரி | லோகா படத்தின் இரண்டாம் பாகம் அறிவிப்பு | 'ஓஜி' வரவேற்பு : ஸ்ரேயா ரெட்டி மகிழ்ச்சி | குடும்பத்துடன் குலதெய்வம் கோவிலில் தரிசனம் செய்த தனுஷ் | துபாயில் சொகுசு கப்பலா... : மாதவன் கொடுத்த விளக்கம் | அருண் விஜய் படத்திற்கு முதல் விமர்சனம் தந்த தனுஷ் | சரஸ்வதி படத்தின் மூலம் இயக்குனர் ஆகும் நடிகை வரலட்சுமி | சாந்தனுவின் ஏக்கம் தீருமா |
இந்தியத் திரையுலகத்தின் சாதனையாளர்களுக்கு இந்திய அரசு சார்பில் வழங்கப்படும் உயரிய விருது 'தாதா சாகேப் பால்கே விருது'. 1969 முதல் இந்த விருது வழஙகப்பட்டு வருகிறது.
தமிழ் சினிமாவுடன் தொடர்பு கொண்டவர்களில் “எல்வி பிரசாத், பி நாகிரெட்டி, நாகேஸ்வரராவ், சிவாஜிகணேசன், டி ராமாநாயுடு, கே பாலசந்தர், கே விஸ்வநாத், ரஜினிகாந்த்,” ஆகியோருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
இயக்குனரும் நடிகருமான செல்வராகவன் எக்ஸ் தளத்தில், “பின் வருபவர்கள் எப்போதோ தாதா சாகேப் பால்கே விருதுகளை வாங்கியிருக்க வேண்டும் என்பது எனது கருத்து. பி. சுசீலா, எஸ் ஜானகி, எஸ்பி பாலசுப்பிரமணியம், கேஜே யேசுதாஸ், இளையராஜா, ஏஆர் ரஹ்மான்…அவர்களில் சிலர்,” என்று குறிப்பிட்டுள்ளார்.