பாடல் இல்லாத படம் 'சரண்டர்' | பிளாஷ்பேக்: மாதவி இரு வேடங்களில் நடித்த படம் | பிளாஷ்பேக்: 3 சகோதரிகள் இணைந்து நடித்த படம் | மோகன்லாலின் நவரச வீடியோவை வெளியிட்ட ‛மலைக்கோட்டை வாலிபன்' பட இயக்குனர் | படத்தை விமர்சிக்கும் முன் தங்கள் வீட்டு பெண்களிடம் ஒரு கேள்வியை கேளுங்கள் : ஜேஎஸ்கே இயக்குனர் ஆதங்கம் | மோகன்லாலின் நகை விளம்பரத்தை விழிப்புணர்வுக்கு பயன்படுத்திய கேரள போலீஸ் | நடிகர் சங்கத் தலைவர் பதவிக்கு போட்டியிடும் ஸ்வேதா மேனன் | மோகன்லால் பட ரீமேக்கில் நடிக்க விரும்பி இயக்குனரை நச்சரிக்கும் பஹத் பாசில் | கடவுள் சிவனாக நடித்து வம்பு இழுக்கிறாரா நடிகர் மன்சூர் அலிகான் | என் மீதான காழ்ப்புணர்ச்சி : ‛டிக் டாக்' இலக்கியா விவகாரத்தில் திலிப் பதில் |
புதுவையில் 9 வயது சிறுமி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யபட்ட சம்பவம் இந்தியாவையே உலுக்கியுள்ளது. இதனையடுத்து சிறுமிக்கு நடந்த கொடுமைக்கு நியாயம் கேட்டு பல்வேறு தரப்பினரும் குரல் கொடுக்க ஆரம்பித்துள்ளனர். புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கத்தினரும் குற்றவாளிகள் சார்பில் ஆஜராகமாட்டோம் என அறிவித்துள்ளனர்.
இதை பாராட்டி பேசியுள்ள மதுரை முத்து ஒட்டு மொத்த பெண் குழந்தைகளின் பெற்றோர்கள் சார்பாக அந்த வழங்கறிஞர்கள் சங்கத்தினருக்கு நன்றி கூறியுள்ளார். அதேபோல் தமிழக வழக்கறிஞர்களும் பாலியல் வன்கொடுமை செய்யும் குற்றவாளிகள் சார்பில் ஆஜராக மாட்டோம் என அறிவிக்க வேண்டும் என வேண்டுகோள் வைத்துள்ளார்.
அதேபோல் மற்றொரு சின்னத்திரை பிரபலமான அறந்தாங்கி நிஷா இதுபோன்ற சம்பவங்களால் வெளிநாட்டில் நாம் எந்த மூஞ்சை வைத்துக் கொண்டு பெருமை பேசுவோம் என்று தன் ஆதங்கத்தை கொட்டியதோடு இதுபோன்ற குற்றச் சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.