‛‛2 ஆயிரம் சம்பளம் கேட்டேன், 4 லட்சம் கொடுத்தார் நட்டி'': சிங்கம்புலி நெகிழ்ச்சி | சொந்த செலவில் பிளைட்டில் வந்து ரஞ்சித்துக்கு உதவிய விஜய்சேதுபதி | கன்னடத்தில் அதிக வசூல் படங்கள் : இரண்டாம் இடம் பிடித்த 'காந்தாரா சாப்டர் 1' | அடுத்தடுத்து வெளியாகும் கவின் படங்களின் அப்டேட் | கன்னட பிக்பாஸ் அரங்கு 'சீல்' வைக்கப்பட்டது - அரசு நடவடிக்கை | பிளாஷ்பேக்: இயக்குநர் துரையின் கலைப்பசிக்கு தீனி போட்ட காவியத் திரைப்படம் | தனிப்பட்ட வாழ்க்கையில் கேமரா வைக்க முடியாது: ராஷ்மிகா மந்தனா | எக்ஸ் தளம் நெகட்டிவிட்டி நிறைந்தது : ரவி தேஜா கருத்து | ராஜமவுலி - மகேஷ்பாபு படத்தின் பெயர் 'வாரணாசி'? | ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் |
பழம்பெரும் நாடக, சின்னத்திரை மற்றும் திரைப்பட நடிகரும், கதாசிரியருமான ‛அடடே' மனோகர், 77, சென்னையில் காலமானார். சென்னை, குமரன்சாவடி பகுதியில் வசித்து வந்த அவர் வயது மூப்பு காரணமாக நேற்று இரவு காலமானார்.
சென்னையை சேர்ந்த மனோகர் ஆரம்ப காலத்தில் ஒரு தனியார் நிறுவனத்தில் பொறுப்பான பதவியில் பணியாற்றினார். அங்கு இருந்தபடியே நாடகங்களில் நடிக்க தொடங்கினார். 3500 மேடை நாடகங்களில் நடித்துள்ளார் மனோகர். எண்ணற்ற டிவி, ரேடியோ நாடகங்களில் தனது பங்களிப்பை சிறப்புற செய்திருக்கிறார். அதில் 6 நாடகங்களுக்கு மேல் அவரே எழுதி, இயக்கி உள்ளார். இதுதவிர வெள்ளித்திரையில் 35க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். பெரும்பாலும் நகைச்சுவை வேடங்களிலேயே இவர் நடித்தார். குறிப்பாக எஸ்வி சேகர், கிரேஸி மோகன் உள்ளிட்டோரின் நாடகங்களில் பணியாற்றி உள்ளார்.
‛‛சின்ன மாப்பிள்ளை பெரிய மாப்பிள்ளை, கையளவு மனசு, பிளைட் 172, நிம்மதி உங்கள் சாய்ஸ், ரமணி வெசஸ் ரமணி, பிரேமி, இரயில் சிநேகம், வண்ணக்கோலங்கள்...'' உள்ளிட்டவை சின்னத்திரை சீரியல்களில் இவர் நடித்த முக்கிய நாடகங்கள் ஆகும்.
கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு இவரது மனைவி காலமானார். இவருக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர்.