மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
பழம்பெரும் நாடக, சின்னத்திரை மற்றும் திரைப்பட நடிகரும், கதாசிரியருமான ‛அடடே' மனோகர், 77, சென்னையில் காலமானார். சென்னை, குமரன்சாவடி பகுதியில் வசித்து வந்த அவர் வயது மூப்பு காரணமாக நேற்று இரவு காலமானார்.
சென்னையை சேர்ந்த மனோகர் ஆரம்ப காலத்தில் ஒரு தனியார் நிறுவனத்தில் பொறுப்பான பதவியில் பணியாற்றினார். அங்கு இருந்தபடியே நாடகங்களில் நடிக்க தொடங்கினார். 3500 மேடை நாடகங்களில் நடித்துள்ளார் மனோகர். எண்ணற்ற டிவி, ரேடியோ நாடகங்களில் தனது பங்களிப்பை சிறப்புற செய்திருக்கிறார். அதில் 6 நாடகங்களுக்கு மேல் அவரே எழுதி, இயக்கி உள்ளார். இதுதவிர வெள்ளித்திரையில் 35க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். பெரும்பாலும் நகைச்சுவை வேடங்களிலேயே இவர் நடித்தார். குறிப்பாக எஸ்வி சேகர், கிரேஸி மோகன் உள்ளிட்டோரின் நாடகங்களில் பணியாற்றி உள்ளார்.
‛‛சின்ன மாப்பிள்ளை பெரிய மாப்பிள்ளை, கையளவு மனசு, பிளைட் 172, நிம்மதி உங்கள் சாய்ஸ், ரமணி வெசஸ் ரமணி, பிரேமி, இரயில் சிநேகம், வண்ணக்கோலங்கள்...'' உள்ளிட்டவை சின்னத்திரை சீரியல்களில் இவர் நடித்த முக்கிய நாடகங்கள் ஆகும்.
கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு இவரது மனைவி காலமானார். இவருக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர்.