லாக் டவுன் டிரைலர் வெளியானது | நடிகைகள் அம்பிகா, ராதாவின் தாயார் காலமானார் | மலையாள சினிமாவில் முதன்முறையாக ஞாயிற்றுக்கிழமை வெளியாகும் படம் | மம்முட்டியின் 'களம்காவல்' புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | பிரபுவுக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்து ஒரு பாடல் படப்பிடிப்புடன் 98லேயே நின்றுபோன தமிழ் படம் | நிரப்ப முடியாத வெற்றிடம் : கணவர் தர்மேந்திரா மறைவு குறித்து ஹேமமாலினி உருக்கம் | மகள் நடிக்கும் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த மோகன்லால் ; கெஸ்ட் ரோலில் நடிக்கிறாரா? | ‛அஞ்சான்' ரீ ரிலீஸில் வெற்றி பெற்றால் அஞ்சான் 2 உருவாகும் : லிங்குசாமி | மீண்டும் ரஜினியுடன் இணைந்த விஜய் சேதுபதி? | ஆண் ஆதிக்கம் இருப்பது கசப்பான உண்மை : கீர்த்தி சுரேஷ் |

தனியார் அமைப்பு ஒன்று தாதா சாகேப் பால்கேவின் பெயரால் ஆண்டு தோறும் விருது வழங்கி வருகிறது. அரசு சினிமாவின் உயரிய விருதாக தாதா சாகேப் பால்கே விருது வழங்கி வரும் நிலையில் தனியார் அமைப்பு ஒன்று அதே பெயரில் விருது வழங்குவது குறித்து சர்ச்சை ஒரு பக்கம் இருந்தாலும், இந்த விருது வழங்கும் விழா நேற்று நடந்தது.
இந்த விழாவில் 'ஜவான்' படத்தில் நடித்த ஷாருக்கான் சிறந்த நடிகராக தேர்ந்தெடுக்கப்பட்டார். சிறந்த நடிகைக்கான விருது அந்த படத்தில் நடித்த நயன்தாராவுக்கு வழங்கப்பட்டது. அதேப்போல் இப்பட இசையமைப்பாளர் அனிருத்திற்கு சிறந்த இசைக்கான விருது வழங்கப்பட்டது.
ஷாரூக்கான் பேசும்போது "நான் சிறந்த நடிகர் விருதுக்கு தகுதியானவன் என என்னை கருதியதற்காக நடுவருக்கு நன்றி தெரிவிக்கிறேன். விருதுகளை விரும்புபவன் நான். அதன்மேல் எனக்கு சிறிதளவு பேராசையும் உண்டு" என்றார்.
நயன்தாராவுக்கு வழங்கப்பட்ட விருதுகள் குறித்தும் விமர்சனங்கள் வரத் தொடங்கி உள்ளது.