அஸ்வத் மாரிமுத்துவிற்கு விண்ணப்பித்த 15 ஆயிரம் உதவி இயக்குனர்கள்! | கவுதம் ராம் கார்த்திக் 19வது படத்தின் படப்பிடிப்பு துவங்கியது! | ''இப்போ ரிஸ்க் எடுக்கலைனா.. எப்பவும் இல்ல'': சினிமா என்ட்ரி குறித்து மனம்திறந்த காவ்யா அறிவுமணி | த்ரிவிக்ரம் இயக்கத்தில் தனுஷ்? | குட் பேட் அக்லி - முன்பதிவு நிலவரம் என்ன? | அஜித், தனுஷ் கூட்டணி அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது! | 'ரெட்ட தல' படத்தின் புதிய அப்டேட்! | ராஜமவுலியுடன் இணையாதது ஏன்? சிரஞ்சீவி விளக்கம் | சென்னையை விட்டு சென்றது ஏன்? சசிகுமார் விளக்கம் | தமிழிலும் வெளியாகும் 'இத்திக்கர கொம்பன்' |
நடிகர்கள் சூர்யா, கார்த்தி இருவரும் ஏழை மாணவ மாணவிகளுக்கு படிப்பதற்கான உதவிகளை தொடர்ந்து செய்து வருகிறார்கள். இந்த நிலையில் தற்போது நடிகர் கார்த்தி, மலிவு விலை உணவகம் ஒன்றை சென்னை வளசரவாக்கத்தில் உள்ள தனது கார்த்தி மக்கள் மன்ற தலைமை அலுவலக வாசலில் தொடங்கி இருக்கிறார். சாலை ஓரத்தில் சிறிய வண்டியில் இந்த உணவகம் செயல்படுகிறது. இதில் வெஜிடெபிள் பிரியாணி வெறும் பத்து ரூபாய்க்கு கொடுக்கிறார்கள். தினமும் மதியம் 12 மணி முதல் ஒன்றரை மணி வரை இங்கு இந்த உணவகம் செயல்படுகிறது. இந்த உணவகம் தொடங்கப்பட்டு 500 நாட்கள் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.