ஹரி ஹர வீரமல்லுவுக்காக 5 ஆண்டுகள் வேறு படங்களில் நடிக்காத நிதி அகர்வால் | பாலிவுட்டில் தடம் பதிப்பாரா ஜூனியர் என்டிஆர் | மோசடி வழக்கை சட்டப்படி சந்திப்பேன் : சாம் சி.எஸ் | பூமிகா ஆசை நிறைவேறுமா? | ஹீரோ இல்லாமல் நடந்த 'ஹரிஹர வீரமல்லு' பட விழா | ஜெயிலர் 2வில் மோகன்லால் இருக்கிறாரா? | விஜய் தரப்பின் பிரஷரால் வேகம் எடுக்கும் 'ஜனநாயகன்' | எனக்குள் அந்த தீ எரியும் வரை சினிமாவில் நடித்துக்கொண்டே இருப்பேன்! - கமல்ஹாசன் சொன்ன பதில் | தயாரிப்பாளர் ராஜேஷ் நடிக்கும் படத்தின் டைட்டில் 'அங்கீகாரம்'! பர்ஸ்ட் லுக் வெளியானது!! | 50வது படத்தில் வித்தியாசமான திருநங்கை வேடம்! - சிம்பு வெளியிட்ட தகவல் |
பெங்களூரை சேர்ந்த மாடல் அழகி ஷெரினா. சூப்பர் மாடல் போட்டியில் பட்டம் பெற்றதன் மூலம் கவனிக்கப்பட்டார். 'பிக் பாஸ் சீசன் -6'ல் போட்டியாளராக பங்கேற்றதன் மூலம் புகழ்பெற்றார். சமுத்திரகனி, தம்பி ராமையா நடித்த 'வினோதய சித்தம்' படத்தில் நடித்திருந்தார். சென்னை ராயப்பேட்டை ஜிபி சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார்.
ஷெரினாவின் மேலாளர் கவுரி ஜெகநாதன் கடந்த மாதம் 20ம் தேதி அண்ணாசாலை காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் ஷெரினாவிடம் கார் ஓட்டுநராக பணியாற்றி வந்த கார்த்திக் மற்றும் அவரது நண்பர்கள் ஷெரினாவுக்கு போன் மூலம் தொடர்ந்து கொலை மிரட்டல் வருவதாகவும், சில்மிஷத்தில் ஈடுபட முயன்றதாகவும் அந்த புகாரில் தெரிவித்துள்ளார்.
இந்த புகாரின் பேரில் அண்ணாசாலை போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த நடிகை ஷெரினாவின் கார் ஓட்டுநரான திருவள்ளூரை சேர்ந்த கார்த்திக் மற்றும் அவரது நண்பர் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த இளையராஜா ஆகிய இருவரை மயிலாடுதுறையில் வைத்து போலீஸார் கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்தனர்.
பின்னர் அவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தியதில் நடிகை ஷெரினா கார் ஓட்டுநர் கார்த்திக்கை சில பிரச்சினை காரணமாக வேலையில் இருந்து நீக்கியதால் ஆத்திரமடைந்த கார்த்திக் தனது கூட்டாளி இளையராஜா உடன் சேர்ந்து நடிகையிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட முயன்றதும் போனில் கொலை மிரட்டல் விடுத்ததும் தெரியவந்தது. இதனை அடுத்து போலீஸார் இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.