மலையாளத்தில் டைம் ட்ராவல் பின்னணியில் உருவாகும் 'ஆடு 3' | சுதீப்பின் 47வது படம் அறிவிப்பு : ஜூலையில் துவங்கி டிசம்பரில் ரிலீஸ் | குழந்தையை தத்தெடுத்து வளர்க்க திட்டமிடும் ஸ்ருதிஹாசன் | அட்லி இயக்கும் விளம்பரத்தில் நடிக்கும் ரன்வீர் சிங், ஸ்ரீ லீலா | ராம் பொத்தினேனி எழுதிய பாடலை பின்னணி பாடிய அனிருத் | 10 மில்லியன் வியூஸ் - தமன்னா சாதனையை முறியடிப்பாரா பூஜா ஹெக்டே | விக்னேஷ் சிவனை பிரிவதாக வதந்தி : போட்டோவால் பதில் சொன்ன நயன்தாரா | தமிழில் மீண்டும் நடிக்கும் அன்னா பென் | சூர்யா சேதுபதியின் வாழ்க்கையில் விளையாடாதீர்கள் : அனல் அரசு வேண்டுகோள் | பிளாஷ்பேக் : நயன்தாராவை கவர்ச்சி களத்தில் தள்ளிய 'கள்வனின் காதலி' |
நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் அதிக சம்பள பெற கூடிய நடிகராக உள்ளார். தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் 'தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்' சுருக்கமாக ‛தி கோட்' என்கிற படத்தில் நடித்து வருகிறார். இதற்காக விஜய் ரூ. 200 கோடி சம்பளமாக பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் தெலுங்கில் ஆர்.ஆர்.ஆர் படத்தை தயாரித்த டிவிவி தயாரிப்பு நிறுவனம் இப்போது விஜய்யை வைத்து புதிய படத்தை தயாரிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இதற்கு விஜய்க்கு தற்போது அவர் வாங்கும் சம்பளத்தை விட இன்னும் அதிகமாக தருவதற்கு தயாரிப்பு நிறுவனம் முன்வந்துள்ளதாக சினிமா வட்டாரங்களில் தெரிவிக்கின்றனர். ஏற்கனவே, தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிப்பில் விஜய் வாரிசு என்கிற படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.