பிரபாஸ் படத்திலிருந்து நீக்கப்பட்டாரா ராஷ்மிகா? | விஜய் சேதுபதி படத்தில் தபு : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | கண்ணப்பா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | 'ரெட்ரோ'வில் 90களின் காதல் கதை : கார்த்திக் சுப்பராஜ் தகவல் | பிளாஷ்பேக் : இளையராஜாவின் பாடலுக்காக உருவான படம் | சினிமா சங்கப் பிரச்னைகளில் அரசு தலையிட வேண்டும் : ஆர்கே செல்வமணி கோரிக்கை | உறுதியானது 'லியோ - குட் பேட் அக்லி' ஒற்றுமை | தனுஷ் - மாரி செல்வராஜ் கூட்டணி : மாறிய தயாரிப்பு நிறுவனம் | ஷங்கர் வழியில் எக்ஸ் தளத்தை 'ஆப்' செய்த ஏஆர் முருகதாஸ் | ஆளே இல்லாத வீட்டிற்கு ஒரு லட்சம் கரண்ட் பில் : கங்கனா ஏற்படுத்திய பரபரப்பு |
நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் அதிக சம்பள பெற கூடிய நடிகராக உள்ளார். தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் 'தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்' சுருக்கமாக ‛தி கோட்' என்கிற படத்தில் நடித்து வருகிறார். இதற்காக விஜய் ரூ. 200 கோடி சம்பளமாக பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் தெலுங்கில் ஆர்.ஆர்.ஆர் படத்தை தயாரித்த டிவிவி தயாரிப்பு நிறுவனம் இப்போது விஜய்யை வைத்து புதிய படத்தை தயாரிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இதற்கு விஜய்க்கு தற்போது அவர் வாங்கும் சம்பளத்தை விட இன்னும் அதிகமாக தருவதற்கு தயாரிப்பு நிறுவனம் முன்வந்துள்ளதாக சினிமா வட்டாரங்களில் தெரிவிக்கின்றனர். ஏற்கனவே, தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிப்பில் விஜய் வாரிசு என்கிற படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.