ஸ்பெயின் கார் பந்தயத்தில் மூன்றாமிடம்: அஜித் அணிக்கு உதயநிதி பாராட்டு | ‛மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு இம்மாதம் துவக்கம்: சமந்தா வெளியிட்ட தகவல் | துணிக்கடை திறப்பு விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்! | 5 வருடத்திற்கு பிறகு பாஸ்போர்ட்டை திரும்பப்பெற்ற ரியா சக்கரவர்த்தி | ‛காந்தாரா சாப்டர் 1' வெற்றியை ஜெயசூர்யா வீட்டில் கொண்டாடிய ரிஷப் ஷெட்டி | 10க்கு 9 எப்பவுமே லேட் தான் ; இண்டிகோ விமான சேவை மீது மாளவிகா மோகனன் அதிருப்தி | பிரம்மாண்ட விழா நடத்தி மோகன்லாலை கவுரவித்த கேரள அரசு | வதந்திகளில் கவனம் செலுத்தவில்லை: காஜல் அகர்வால் | தள்ளி வைக்கப்படுமா 'லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி' ? | சூரியின் 'மண்டாடி' படப்பிடிப்பில் விபத்து: கேமரா கடலில் மூழ்கியது |
நெல்சன் இயக்கத்தில் நடித்த ஜெயிலர் படத்தை அடுத்து தற்போது ஞானவேல் இயக்கும் வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். இந்த படத்தை முடித்ததும் மீண்டும் நெல்சன் இயக்கும் ஜெயிலர்- 2 படத்தில் ரஜினிகாந்த் நடிக்க இருப்பதாக ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது. ஜெயிலர் படத்தில் சிலை கடத்தல்கார்களிடம் இருந்து தனது மகனை மீட்கும் ரஜினி, பின்னர் மகனையே கொலை செய்வதோடு கதை முடிந்திருக்கும்.
இந்த நிலையில் ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகத்தில் சிலை கடத்தல் காரர்களுக்கும் ரஜினிக்கும் இடையே மோதும் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு கதை உருவாகி இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், இந்த ஜெயிலர்-2 படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க இருப்பதாக ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது. ஏற்கனவே சந்திரமுகி, குசேலன், சிவாஜி, தர்பார், அண்ணாத்த என ஐந்து முறை ரஜினியுடன் நடித்துள்ள நயன்தாரா, ஆறாவது முறையாக மீண்டும் இப்படத்தில் இணையப்போகிறார்.