கலைமாமணி விருது பெற்றனர் சாய் பல்லவி, அனிருத், விக்ரம் பிரபு | மீண்டும் தனுஷ் படத்திற்கு இசையமைக்கும் அனிருத் | டியூட் சமூகப் பிரச்னையை வெளிச்சம் போட்டு காட்டும் : சொல்கிறார் பிரதீப் ரங்கநாதன் | கமலுக்கு அடுத்து அழகான ஹீரோ ஹரிஷ் கல்யாண் தான் : சொல்கிறார் இயக்குனர் மிஷ்கின் | ரஜினியின் வேட்டையன் வெளியாகி ஓராண்டு நிறைவு : இயக்குனர் ஞானவேல் வெளியிட்ட பதிவு | கணவரின் ஆயுள் நீடிக்க காஜல் அகர்வால் கர்வா சவுத் பூஜை | பிளாஷ்பேக்: ரஜினி படத்தில் நடிக்க மறுத்த சிவாஜி | பிளாஷ்பேக் : 36 ஆண்டுகள் இருட்டு அறையில் தனிமையில் வாழ்ந்த நடிகை | முதல் படத்திலேயே ஆக்ஷன் ஹீரோயின் ஆன சுஷ்மிதா சுரேஷ் | 'பேட்டில்' படத்தில் ராப் பாடகரின் வாழ்க்கை |
ஹாலிவுட்டின் பிரபலமான நடிகர் அர்னால்டு ஸ்வார்ஸ்னேக்கர்(76). அமெரிக்கா, கலிபோர்னியா மாகாணத்தின் முன்னாள் கவர்னரும் கூட. இவர் அமெரிக்காவிலிருந்து ஜெர்மனிக்கு சென்றுள்ளார். அங்குள்ள முனிச் விமான நிலையத்தில் சுங்க துறை அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டார். அர்னால்டு அணிந்து வந்த விலையுர்ந்த கைகடிகாரம் சுவிஸ் நிறுவனத்தால் பிரத்யேமாக தயாரிக்கப்பட்டு அர்னால்டுக்கு வழங்கப்பட்டது. இதன் மதிப்பு 22 ஆயிரம் யூரோக்கள். இந்த கைகடிகாரம் பற்றிய விரபங்களை அர்னால்டு தரப்பில் சுங்க ஆவணங்களில் குறிப்பிடவில்லை. இதனால் சுங்க அதிகாரிகள் அர்னால்ட்டிடம் இதுபற்றி விசாரணை மேற்கொண்டனர்.
இந்த கைகடிகாரத்தை ஏலம் விட்டு அதில் கிடைக்கும் பணத்தை தொண்டு நிறுவனத்திற்கு வழங்க உள்ளதாக அர்னால்டு தெரிவித்தார். ஆனால் அதை அதிகாரிகள் ஏற்கவில்லை. இதையடுத்து அபராதம் மற்றும் வரி ஆகியவற்றை சேர்த்து 35,000 யூரோக்கள் செலுத்த வேண்டும் என தெரிவித்தனர். அர்னால்டு தன்னிடம் கையில் பணம் இல்லை என்றும், ஆன்லைன் வாயிலாக செலுத்துவதாகவும் கூறி உள்ளார். ஆனால் அதிகாரிகள் பாதி தொகையை ரொக்கமாக தான் செலுத்த வேண்டும் என நிர்பந்தித்துள்ளனர். இதையடுத்து வங்கி ஏடிஎம் சென்று ரொக்க தொகையை எடுத்து வந்து அர்னால்டு செலுத்தினார். இதையடுத்து அவரை விமான நிலைய அதிகாரிகள் அனுமதித்தனர். இதனால் கிட்டத்தட்ட 3 மணிநேரம் விமான நிலையத்தில் அர்னால்டு தடுத்து நிறுத்தப்பட்டார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.