நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவம் பொல்லாதது-க்கு பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

சமீபகாலமாக தமிழ், தெலுங்கு என எந்த மொழியாக இருந்தாலும் அங்குள்ள முன்னணி ஹீரோக்களின் போஸ்டர்களில் எல்லாமே அவர்கள் புகை பிடிப்பது போன்ற காட்சி தான் தவறாமல் இடம் பெறுகிறது. இதுகுறித்த கடுமையான விமர்சனங்களையும் அவர்கள் சந்தித்து வருகிறார்கள். மேலும் படத்திலும் அவர்கள் சிகரெட் குடிக்கும் காட்சிகள் இடம் பெறுகின்றன.
சமீபத்தில் தெலுங்கில் மகேஷ்பாபு நடிப்பில் வெளியான குண்டூர் காரம் படத்தின் போஸ்டர்களில் எல்லாம் பெரும்பாலும் அவர் புகை பிடிப்பது போன்று தான் உருவாக்கப்பட்டுள்ளன. ஆனால் நிஜமாகவே தனக்கு புகை பிடிக்கும் பழக்கம் இல்லை என்றும் புகை பிடிப்பதை எப்போதும் ஊக்கப்படுத்த மாட்டேன் என்றும் கூறியுள்ளார் மகேஷ்பாபு.
இதுகுறித்து மகேஷ்பாபு கூறும்போது, “இந்த படத்தில் முதல் நாள் நிஜமான பீடி பிடித்தபோது அதனால் ஏற்பட்ட தலைவலியை என்னால் தாங்க முடியவில்லை. அதற்கு பிறகு இதுபற்றி இயக்குனர் திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸிடம் கூறியபோது, இந்த ஆயுர்வேத பீடியை உபயோகிக்க முடிவு செய்தோம். இதை புகைத்தபோது மனதிற்கு மட்டுமல்ல மூளைக்குமே நல்ல சுறுசுறுப்பு ஏற்பட்டது. அதன் புகையால் ஏற்பட்ட நறுமணம் கூட இனிமையாக இருந்தது” என்று கூறியுள்ளார்.