துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் |
ஞானவேல்ராஜா தயாரித்த 'மிஸ்டர் லோக்கல்' படத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருந்தார். இந்த படத்தில் நடித்ததற்காக அவருக்கு வழங்கப்பட்ட சம்பளத்தில் வரிபிடித்தம் செய்தே வழங்கி உள்ளார் ஞானவேல்ராஜா. ஆனால் பிடித்தம் செய்த தொகையை அவர் வருமானவரித்துறைக்கு கட்டாததால் சிவகார்த்திகேயன் வங்கி கணக்கில் இருந்து 12 லட்சத்தை வருமானவரித்துறை எடுத்துக் கொண்டது.
இதனை எதிர்த்து சிவகார்த்திகேயன் சென்னை உயர்நீதிமன்றத்தல் வழக்கு தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்திருந்த மனுவில் “நான் நடித்த 'மிஸ்டர் லோக்கல்' படத்துக்காக 2018ம் ஆண்டு தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா 15 கோடி சம்பளம் பேசி ஒப்பந்தம் போட்டார். 2019ம் ஆண்டு மே மாதம் படம் வெளியான நிலையில், எனது சம்பள தொகையில் வருமான வரியை ஞானவேல் ராஜா பிடித்தம் செய்தார். ஆனால் பிடித்தம் செய்த வரியை வருமான வரித்துறைக்கு செலுத்தவில்லை. இதன் காரணமாக வருமான வரி பிடித்தத்தை எனது வங்கி கணக்கில் இருந்து வருமான வரித்துறை எடுத்துக்கொண்டது. இந்த தொகையை திரும்ப வழங்க வருமான வரித்துறைக்கு உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார்.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது சிவகார்த்திகேயனுக்கு திரும்ப வழங்க வேண்டிய 12 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் வட்டியுடன் அவரது வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு விட்டதாக வருமான வரித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து வழக்கை முடித்து வைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.