கார்த்திக் சுப்பராஜ், சிவகார்த்திகேயன் புதிய கூட்டணி | தமன்னாவை ஏமாற்றிய ஒடேலா- 2! | சமூக வலைதளங்களில் இருந்து மீண்டும் பிரேக் எடுத்த லோகேஷ் கனகராஜ் | மனைவிகிட்ட சண்டை போட்டுக்கிட்டே இருந்தா வெளியில போய் ஜெயிக்க முடியாது! -நடிகை ரோஜா | டி.ராஜேந்தரின் பாடலை தழுவி உருவாக்கப்பட்ட சூர்யாவின் ரெட்ரோ பட பாடல்! | முன்னேறிச் செல்லுங்கள்- தமிழக கிரிக்கெட் வீரருக்கு சிவகார்த்திகேயன் பாராட்டு! | புதிய விதிகளை அமல்படுத்திய ஆஸ்கர் அகாடமி | என்ன சமந்தா தனது முதல் இரண்டு படங்கள் பற்றி இப்படி சொல்லிட்டார்.... | 'தொடரும்' படத்தில் நடிப்பதற்கு முன் இயக்குனர் மீது ஷோபனாவுக்கு வந்த சந்தேகம் | அட்ஜஸ்ட்மென்ட் குறித்த மாலா பார்வதியின் கருத்துக்கு நடிகை ரஞ்சனி கண்டனம் |
தெலுங்குத் திரையுலகின் இளம் முன்னணி நடிகரான விஜய் தேவரகொண்டா, தற்போது பான் இந்தியா நடிகையாக உயர்ந்துள்ள கன்னட நடிகையான ராஷ்மிகா மந்தனா ஆகியோர் தெலுங்கில் இணைந்து நடித்த போது காதலில் விழுந்ததாக கிசுகிசு பரவியது.
'கீதா கோவிந்தம், டியர் காம்ரேட்' ஆகிய இரண்டு படங்களிலும் அவர்களது காதல் நடிப்பைப் பார்த்து வியக்காதவர்கள் இல்லை. அந்த அளவுக்கு அன்யோன்யமாக நடித்திருந்தனர். அதைப் பார்த்ததுமே அவர்களுக்குள் காதல் என பேச ஆரம்பித்துவிட்டார்கள். இருவரும் மாலத்தீவு டூர் கூட ரகசியமாக சென்று வந்தார்கள்.
அடிக்கடி அவர்களது காதல் பற்றி ஏதாவது செய்திகள் வெளியாகும். தற்போது இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. பிப்ரவரி மாதம் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம், பின்னர் திருமணம் என வெளியிட்டு வருகிறார்கள்.
ராஷ்மிகா தற்போது தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். கடந்த வருடம் தமிழில் 'வாரிசு', ஹிந்தியில் வசூலைக் குவித்த 'அனிமல்' ஆகிய படங்களில் நடித்தார். பிஸியாக இருக்கும் நேரத்தில் இப்படி ஒரு திருமண செய்தி வர ஏதும் காரணமா அல்லது உண்மையிலேயே நடக்க உள்ளதா என்பது குறித்து விஜய், ராஷ்மிகா இருவரில் யாராவது ஒருவர் சொன்னால்தான் தெரிய வரும்.