சூர்யவம்சம் 2ம் பாகம் உருவாகிறது? | தமிழில் அறிமுகமாகும் ராப் பாடகர் வேடன் | உடலை வருத்தும் சிம்பு | தனுஷ் பிறந்தநாளில் புதுப்பொலிவுடன் ரீ-ரிலீஸ் ஆகும் ‛புதுப்பேட்டை' | ஸ்டன்ட் காட்சியில் ஒருவர் உயிரிழப்பு : இயக்குனர் பா.ரஞ்சித் மீது வழக்கு பதிவு | ரஜினி ரசிகர்களுக்கு நேற்று முக்கியமான நாள் : அப்படி என்ன சிறப்பு தெரியுமா? | மகன் மீதான தாக்குதல் : மறைமுகமாக பதிலடி கொடுத்த விஜய்சேதுதி | அடுத்தடுத்து 3 படங்கள்... சம்பளம் 100 கோடி : சிவகார்த்திகேயன் மார்க்கெட் விரிவடைகிறது | ஜுலை 18ல் இத்தனை படங்கள் வெளியீடா….??? | மலேசியாவில் இருந்து சென்னை திரும்பினார் பாரதிராஜா : பாராட்டு விழா எப்போது? |
சிவாஜி எம்,ஜி.ஆர் ஆகிய இரு ஆளுமைகளை தன் வசனங்களால் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களாக மாற்றியவர் கருணாநிதி என நடிகர் கமலஹாசன் கூறினார்.
சென்னை கிண்டியில் உள்ள ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் கருணாநிதியின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. இதில் கலந்து கொண்டு நடிகர் கமலஹாசன் பேசியதாவது:
சினிமாவில் இருந்த போது அரசியலையும், அரசியலில் இருந்த போது சினிமாவையும் மறக்காமல் இருந்தவர் கருணாநிதி அவர் தன்னையும் வளர்த்தார், தமிழையும் வளர்த்தார், தமிழ்நாட்டையும் வளர்த்தார். கருணாநிதியின் பண்பு முதல்வர் ஸ்டாலினிடமும் உள்ளது.நெருங்கிய நண்பர் விஜயகாந்தின் இறுதிச்சடங்கை சிறப்பான முறையில் நடத்தி தந்த முதல்வர் ஸ்டாலினுக்கு சிரம் தாழ்ந்த நன்றிகள் . கருணாநிதி இருந்தாலும்இல்லாவிட்டாலும் அவர் எனக்கு சூட்டிய கலைஞானி என்ற பட்டம் என்னை தொடர்கிறது என்னைத் தொடரும்.
எனது தமிழ் ஆசான் எம்.ஜி.ஆர்
தமிழும் கருணாநிதியும், சினிமாவும் கருணாநிதியும், அரசியலும் கருணாநிதியும் பிரிக்க முடியாதவை.எனது தமிழ் ஆசான்கள் மூன்று பேர் . கருணாநிதி, நடிகர் திலகம் சிவாஜி, எம்.ஜி.ஆர். என பேசினார்.