குபேரா : தெலுங்குக்கே முன்னுரிமை? | மகனுக்காக திருப்பதியில் முடி காணிக்கை செலுத்தி அன்னதானம் செய்த பவன் கல்யாண் மனைவி | 6 மாதத்தில் 15 கிலோ எடை குறைத்த ரஜிஷா விஜயன் | குஞ்சாக்கோ போபன் - பாவனா எதிர்பாராத சந்திப்பு | ஹிந்தி படத்தில் கரீனா கபூருக்கு ஜோடியாக இணைந்த பிரித்விராஜ் | இயக்குனர் எஸ்.எஸ்.ஸ்டான்லி காலமானார் | ஒரே நாளில் 3 படங்கள் ; மூன்றிலும் வீணடிக்கப்பட்ட வில்லன் நடிகர் | ஹரிஷ் கல்யாண் 15வது படம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு | நேருக்கு நேர் மோதும் சந்தானம், சூரி படங்கள்! | தமிழ் மொழிக்கான பெருமைச்சின்னம்: ஏ.ஆர்.ரஹ்மான் அறிவிப்பு |
சிவாஜி எம்,ஜி.ஆர் ஆகிய இரு ஆளுமைகளை தன் வசனங்களால் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களாக மாற்றியவர் கருணாநிதி என நடிகர் கமலஹாசன் கூறினார்.
சென்னை கிண்டியில் உள்ள ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் கருணாநிதியின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. இதில் கலந்து கொண்டு நடிகர் கமலஹாசன் பேசியதாவது:
சினிமாவில் இருந்த போது அரசியலையும், அரசியலில் இருந்த போது சினிமாவையும் மறக்காமல் இருந்தவர் கருணாநிதி அவர் தன்னையும் வளர்த்தார், தமிழையும் வளர்த்தார், தமிழ்நாட்டையும் வளர்த்தார். கருணாநிதியின் பண்பு முதல்வர் ஸ்டாலினிடமும் உள்ளது.நெருங்கிய நண்பர் விஜயகாந்தின் இறுதிச்சடங்கை சிறப்பான முறையில் நடத்தி தந்த முதல்வர் ஸ்டாலினுக்கு சிரம் தாழ்ந்த நன்றிகள் . கருணாநிதி இருந்தாலும்இல்லாவிட்டாலும் அவர் எனக்கு சூட்டிய கலைஞானி என்ற பட்டம் என்னை தொடர்கிறது என்னைத் தொடரும்.
எனது தமிழ் ஆசான் எம்.ஜி.ஆர்
தமிழும் கருணாநிதியும், சினிமாவும் கருணாநிதியும், அரசியலும் கருணாநிதியும் பிரிக்க முடியாதவை.எனது தமிழ் ஆசான்கள் மூன்று பேர் . கருணாநிதி, நடிகர் திலகம் சிவாஜி, எம்.ஜி.ஆர். என பேசினார்.