300 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'வாயாடி பெத்த புள்ள' | யு டியூப் தளத்தில் 'டாப் வியூஸ்' பெற்ற தமிழ் பாடல்கள் : ஒரு ரீவைண்ட்…! | 23 நாளில் படப்பிடிப்பு... ரூ.25 லட்சத்தில் படம் : வியக்க வைக்கும் ‛மாயக்கூத்து' | ராஜா சாப் படத்தில் விக் வைத்து நடிக்கிறாரா பிரபாஸ்? : ரசிகர்களுக்கு எழுந்த புதிய சந்தேகம் | ராமாயணா முதல் பாகத்தில் யஷ் வருவது வெறும் 15 நிமிடங்கள் தான் | மலையாளத்தில் டைம் ட்ராவல் பின்னணியில் உருவாகும் 'ஆடு 3' | சுதீப்பின் 47வது படம் அறிவிப்பு : ஜூலையில் துவங்கி டிசம்பரில் ரிலீஸ் | குழந்தையை தத்தெடுத்து வளர்க்க திட்டமிடும் ஸ்ருதிஹாசன் | அட்லி இயக்கும் விளம்பரத்தில் நடிக்கும் ரன்வீர் சிங், ஸ்ரீ லீலா | ராம் பொத்தினேனி எழுதிய பாடலை பின்னணி பாடிய அனிருத் |
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில், ராகவா லாரன்ஸ், எஸ்ஜே சூர்யா, நிமிஷா சஜயன் மற்றும் பலர் நடிப்பில் கடந்த வருடம் நவம்பர் 10ம் தேதி வெளியான படம் 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்'. இப்படத்திற்கு விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு கிடைத்தது.
இப்படத்தின் 50வது நாளை ரசிகர்களுடன் கொண்டாட படக்குழு முடிவு செய்துள்ளது. ஜனவரி 5ம் தேதி சென்னையில் உள்ள திரையரங்கில் அந்த கொண்டாட்டத்தை 99 ரூபாய் டிக்கெட் கட்டணத்துடன் ரசிகர்களை வரவழைத்து கொண்டாட அறிவிப்பை வெளியிட்டுள்ளார்கள். அதில் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் கலந்து கொள்ளப் போகிறார் என்றும் குறிப்பிட்டுள்ளார்கள்.
பொதுவாக இப்படியான பட விழாக்கள் பத்திரிகையாளர்கள் சந்திப்பு, அல்லது நட்சத்திர ஹோட்டலில் விழா என்றுதான் நடக்கும். ஒரு படம் ஓடி முடிந்த பின் அதன் 50வது நாள் விழாவை இப்படி டிக்கெட் கட்டணம் வசூலித்துக் கொண்டாடுவது இதுவே முதல் முறையாக இருக்கும்.