தமிழுக்கு வரும் கோமாலி பிரசாத் | குலதெய்வ வழிபாட்டு கதையில் 'ஒண்டிமுனியும் நல்லபாடனும்' | சசிகுமாரின் அடுத்த படத்திலும் இலங்கை பின்னணி கதை | திரைகதையில் திருத்தம்: வா வாத்தியாருக்கு மறுபடப்பிடிப்பு | பிளாஷ்பேக் : அரசு விருது பெற்ற முதல் தமிழ் படம் | பிளாஷ்பேக்: மலேசிய வாசுதேவன் இயக்கிய ஒரே படம் | பிளாஷ்பேக் : இந்தியா முழுக்க வெற்றி பெற்று தமிழில் தோல்வி அடைந்த 'அப்னா தேஷ்' | ஒரே படம் ஓஹோ வாழ்க்கை... கன்னாபின்னான்னு இழுக்கப்படும் பெயர் : கவலையில் கயாடு லோஹர் | சினிமாவில் 60வது ஆண்டை தொட்ட வெண்ணிற ஆடை மூர்த்தி | ஜெயமோகன் படத்துக்கு இந்த நிலையா? |
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில், ராகவா லாரன்ஸ், எஸ்ஜே சூர்யா, நிமிஷா சஜயன் மற்றும் பலர் நடிப்பில் கடந்த வருடம் நவம்பர் 10ம் தேதி வெளியான படம் 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்'. இப்படத்திற்கு விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு கிடைத்தது.
இப்படத்தின் 50வது நாளை ரசிகர்களுடன் கொண்டாட படக்குழு முடிவு செய்துள்ளது. ஜனவரி 5ம் தேதி சென்னையில் உள்ள திரையரங்கில் அந்த கொண்டாட்டத்தை 99 ரூபாய் டிக்கெட் கட்டணத்துடன் ரசிகர்களை வரவழைத்து கொண்டாட அறிவிப்பை வெளியிட்டுள்ளார்கள். அதில் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் கலந்து கொள்ளப் போகிறார் என்றும் குறிப்பிட்டுள்ளார்கள்.
பொதுவாக இப்படியான பட விழாக்கள் பத்திரிகையாளர்கள் சந்திப்பு, அல்லது நட்சத்திர ஹோட்டலில் விழா என்றுதான் நடக்கும். ஒரு படம் ஓடி முடிந்த பின் அதன் 50வது நாள் விழாவை இப்படி டிக்கெட் கட்டணம் வசூலித்துக் கொண்டாடுவது இதுவே முதல் முறையாக இருக்கும்.