லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
நடிகர் அஜித்தை பொருத்தவரை தனது படப்பிடிப்பு நடக்கும் இடங்களில், தான் சுற்றுலா செல்லும் இடங்களில் எல்லாம் தன்னை சந்திக்கும் ரசிகர்களுடன் அவர்களது மனம் கோணாமல் சந்தோசமாக புகைப்படம் எடுத்துக் கொள்ளும் மனிதர் தான். ஆனாலும் சமீபத்தில் தன்னை வீடியோ எடுத்த ஒரு ரசிகரின் மொபைல் போனை அவரிடம் இருந்து வாங்கி அந்த வீடியோவை டெலீட் செய்துவிட்டு பின் அவரிடம் மீண்டும் செல்போனை கொடுத்துள்ளார் அஜித். இது குறித்த வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் தற்போது வைரல் ஆகி வருகிறது.
அஜித் தன்னுடைய ரசிகர்களுடன் தாராளமாக புகைப்படம் எடுத்துக் கொள்கிறார் என்றாலும் அதை தன்னுடைய அனுமதியின் பேரில் ஒரு வரைமுறைக்குட்பட்டே அனுமதிக்கிறார். அவருடைய அனுமதியின்றி இந்த வீடியோ எடுக்கப்பட்டதால் தான், அஜித் கோபமாகி இதுபோன்று அந்த செல்போனை வாங்கி வீடியோவை அழித்துள்ளார் என்று சொல்லப்படுகிறது. அஜித்தின் இந்த செயல் தற்போது சோசியல் மீடியாவில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.