மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ், பிரியங்கா மோகன், சிவராஜ்குமார் நடிப்பில் உருவாகியுள்ள படம் கேப்டன் மில்லர். இந்த படம் ஜனவரி 12ம் தேதி திரைக்கு வருகிறது. பீரியட் ஆக்சன் அட்வெஞ்சரஸ் படமாக உருவாகி இருக்கும் கேப்டன் மில்லர் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நேற்று (ஜன.,3) சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. அப்போது இப்படத்தில் இடம்பெற்ற பிரபலங்கள், படம் குறித்த விஷயங்களை பகிர்ந்து கொண்டார்கள். குறிப்பாக கேப்டன் மில்லர் படம் விஸ்வாசம் படத்தைப் போலவே இருக்கும் என்று தயாரிப்பாளர் கூறினார்.
அதையடுத்து தனுஷ் பேசும்போது, ‛‛சமூக வலைதளம் என்பது மிகப்பெரிய காலத் திருடன். அது உங்களுக்கே தெரியாமல் உங்களின் நேரத்தை திருடிக் கொண்டிருக்கிறது. அதுமட்டுமின்றி நான்கு பேர் ஒன்றாக இருக்கும்போது ஒருவருக்கு ஒருவர் முகம் பார்த்து பேசுவது தான் சிறப்பாக இருக்கும். ஆனால் அதை தவிர்த்து விட்டு மொபைலில் முகம் பார்த்து பேசுவது வேண்டாம்'' என்று கூறினார். அதோடு, ‛‛வளர்ந்து வரும் காலகட்டத்தில் அனைத்துமே சமூக வலைத்தளங்கள் மூலமாக தெரிந்து கொள்ளப்படுகிறது. எதையும் அளவாக பயன்படுத்தினால் அனைவருக்கும் நல்லது'' என்றும் தனுஷ் பேசியது கவனம் பெற்றுள்ளது.