Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சோசியல் மீடியா ஒரு காலத் திருடன்- தனுஷ் வெளியிட்ட எச்சரிக்கை செய்தி!!

04 ஜன, 2024 - 06:43 IST
எழுத்தின் அளவு:
Social-media-is-a-thief-of-time--Dhanush's-warning-message!!

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ், பிரியங்கா மோகன், சிவராஜ்குமார் நடிப்பில் உருவாகியுள்ள படம் கேப்டன் மில்லர். இந்த படம் ஜனவரி 12ம் தேதி திரைக்கு வருகிறது. பீரியட் ஆக்சன் அட்வெஞ்சரஸ் படமாக உருவாகி இருக்கும் கேப்டன் மில்லர் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நேற்று (ஜன.,3) சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. அப்போது இப்படத்தில் இடம்பெற்ற பிரபலங்கள், படம் குறித்த விஷயங்களை பகிர்ந்து கொண்டார்கள். குறிப்பாக கேப்டன் மில்லர் படம் விஸ்வாசம் படத்தைப் போலவே இருக்கும் என்று தயாரிப்பாளர் கூறினார்.

அதையடுத்து தனுஷ் பேசும்போது, ‛‛சமூக வலைதளம் என்பது மிகப்பெரிய காலத் திருடன். அது உங்களுக்கே தெரியாமல் உங்களின் நேரத்தை திருடிக் கொண்டிருக்கிறது. அதுமட்டுமின்றி நான்கு பேர் ஒன்றாக இருக்கும்போது ஒருவருக்கு ஒருவர் முகம் பார்த்து பேசுவது தான் சிறப்பாக இருக்கும். ஆனால் அதை தவிர்த்து விட்டு மொபைலில் முகம் பார்த்து பேசுவது வேண்டாம்'' என்று கூறினார். அதோடு, ‛‛வளர்ந்து வரும் காலகட்டத்தில் அனைத்துமே சமூக வலைத்தளங்கள் மூலமாக தெரிந்து கொள்ளப்படுகிறது. எதையும் அளவாக பயன்படுத்தினால் அனைவருக்கும் நல்லது'' என்றும் தனுஷ் பேசியது கவனம் பெற்றுள்ளது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
சூரியின் ‛கருடன்' படப்பிடிப்பு நிறைவு!சூரியின் ‛கருடன்' படப்பிடிப்பு ... ஜி.வி.பிரகாஷின் 'ரிபெல்' படத்திற்கு யுஏ சான்றிதழ்! ஜி.வி.பிரகாஷின் 'ரிபெல்' ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)