மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருப்பவர் லோகேஷ் கனகராஜ். மாநகரம் படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற வெற்றி படங்களை இயக்கினார். அடுத்து ரஜினியை வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளார்.
இந்நிலையில் மதுரை ஐகோர்ட் கிளையில் லோகேஷ் மீது ராஜூ முருகன் என்பவர் வழக்கு தாக்கல் செய்துள்ளார். அதில், ‛‛லியோ படத்தில் பெரும்பாலும் வன்முறை காட்சிகள் தான் அதிகம் உள்ளன. கலவரம், சட்டவிரோத செயல்கள், போதை பொருள் வியாபாரம், துப்பாக்கிகளை பயன்படுத்துதல், காவல்துறை உதவி உடன் எல்லா குற்றங்களையும் செய்ய முடியும் என்ற சமூகவிரோத கருத்துகளை லியோ படத்தில் காட்சிப்படுத்தி உள்ளார்.
லோகேஷ் பெரும்பாலும் வன்முறை, போதைப்பொருள் மூலம் சமூகத்திற்கு தவறான வழிகாட்டுதல்களை காட்டுகிறார். அவருக்கு உளவியல் பரிசோதனை செய்ய வேண்டும். லியோ படத்தை முழுமையாக தடை செய்ய வேண்டும் என தனது மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.
இந்த வழக்கு இன்று நீதிபதிகள் கிருஷ்ணகுமார், விஜயகுமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது லோகேஷ் தரப்பில் யாரும் ஆஜராகததால் வழக்கு விசாரணையை நீதிபதிகள் ஒத்தி வைத்துள்ளனர்.