ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
கடந்த 17, 18ம் தேதிகளில் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை கொட்டி தீர்த்தது. தாமிரபரணி உள்ளிட்ட பல ஆறுகளில் இருந்து உடைப்பு ஏற்பட்டு வெள்ளம் ஊருக்குள் புகுந்தது. இதில் ஏராளமானோர் வீடுகளை இழந்துள்ளார்கள். இதையடுத்து தமிழக அரசும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் மக்களுக்கு நிவாரண உதவிகளை செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில் நடிகர் விஜய்யும் தென் மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்குமாறு தனது விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை கேட்டுக் கொண்டிருந்தார். இந்நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெல்லை மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை பகுதியில் நேற்று 1000 பேருக்கு நிவாரண பொருட்கள் வழங்கினார் விஜய். அப்போது சிலர் நிவாரண பொருளை விட விஜய்யுடன் செல்பி எடுத்துக்கொண்டாலே போதும் என்றும் படையெடுத்துள்ளனர்.
இப்படியான நிலையில், நிவாரண பொருட்களை வழங்கிய விஜய், அங்கிருந்து புறப்பட்டு செல்லும்போது அவருடன் செல்பி எடுப்பதற்கு ஏராளமானோர் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டார்கள். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் இரண்டு பெண்கள் உட்பட ஆறு பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.