இன்ஸ்டாகிராம் மட்டுமல்ல போன் நம்பரையும் ஹேக் செய்து விட்டார்கள் ; நடிகை லட்சுமி மஞ்சு விரக்தி | மோகன்லால் மகனின் காதல் கல்யாணியுடன் அல்ல ; பிரபல தயாரிப்பாளர் வெளியிட்ட ரகசியம் | நள்ளிரவில் கேரள போலீசாரிடம் ஹோட்டலில் இருந்து குதித்து தப்பிய வில்லன் நடிகர் | 'கனிமா'வைத் தொடர்ந்து 'ஜிங்குச்சா' : மீண்டும் ஒரு திருமணப் பாடல் | 'பெத்தி' படத்தில் இணைகிறாரா காஜல் அகர்வால்? | 'கூலி' படத்தில் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' பிரபலம்! | ரெட்ரோ படத்தின் தணிக்கை மற்றும் நீளம் குறித்து தகவல் இதோ! | ஆன் ஸ்க்ரீன் என்னோட குரு கமல்ஹாசன் - சிலம்பரசன் பேச்சு | பொன்னியின் செல்வன் : தயாரிக்க மறுத்த கமல்ஹாசன் | தனுசுடன் 'குபேரா' புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க தயாராகி வரும் ராஷ்மிகா மந்தனா! |
கடந்த 17, 18ம் தேதிகளில் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை கொட்டி தீர்த்தது. தாமிரபரணி உள்ளிட்ட பல ஆறுகளில் இருந்து உடைப்பு ஏற்பட்டு வெள்ளம் ஊருக்குள் புகுந்தது. இதில் ஏராளமானோர் வீடுகளை இழந்துள்ளார்கள். இதையடுத்து தமிழக அரசும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் மக்களுக்கு நிவாரண உதவிகளை செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில் நடிகர் விஜய்யும் தென் மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்குமாறு தனது விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை கேட்டுக் கொண்டிருந்தார். இந்நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெல்லை மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை பகுதியில் நேற்று 1000 பேருக்கு நிவாரண பொருட்கள் வழங்கினார் விஜய். அப்போது சிலர் நிவாரண பொருளை விட விஜய்யுடன் செல்பி எடுத்துக்கொண்டாலே போதும் என்றும் படையெடுத்துள்ளனர்.
இப்படியான நிலையில், நிவாரண பொருட்களை வழங்கிய விஜய், அங்கிருந்து புறப்பட்டு செல்லும்போது அவருடன் செல்பி எடுப்பதற்கு ஏராளமானோர் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டார்கள். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் இரண்டு பெண்கள் உட்பட ஆறு பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.