அடுத்தும் தமிழ் இயக்குனர் படத்தில் அல்லு அர்ஜுன்? | அஞ்சான் - ரீ ரிலீஸிலும் ஏற்பட்ட சிக்கல் | தனுஷ் 55, தயாரிப்பாளர் மாறுகிறாரா ? | ஓமர் ஷெரீப்பை மம்முட்டியாக மாற்றிய நண்பனை முதன் முறையாக மேடையேற்றிய மம்முட்டி | மீண்டும் ஒரே நாளில் வெளியாகும் அனுபமா, ரஜிஷா படங்கள் | மகேஷ்பாபு, ரவீனா டான்டன் குடும்ப வாரிசுகள் இணையும் படத்திற்கு டைட்டில் அறிவிப்பு | இப்போதைக்கு லோகா.. அடுத்து இன்னொரு படம் வரும் : பிரித்விராஜ் ஆருடம் | திரிஷ்யம் 3 மலையாளத்தில் தான் முதலில் வெளியாகும் : ஜீத்து ஜோசப் திட்டவட்டம் | பாலிவுட் நடிகருக்கு ஜோடியாகும் மீனாட்சி சவுத்ரி | நடிகர் சிவகுமாருக்கு கவுரவ டாக்டர் பட்டம் |

தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குனர் ஏ.எல்.விஜய். மதராசப்பட்டினம், தெய்வதிருமகள், தலைவா, தலைவி உள்ளிட்ட பல முக்கிய படங்களை இயக்கி உள்ளார். தற்போது அவர் இயக்கி உள்ள 'மிஷன் சேப்டர் 1' என்ற படம் பொங்கலை முன்னிட்டு வெளிவருகிறது. இதற்கான பணியில் அவர் மும்முரமாக இருக்கிறார்.
விஜய், சென்னை தேனாம்பேட்டை அபிபுல்லா சாலையில் வசித்து வருகிறார். இந்தநிலையில் நேற்று காலை படத்தின் பணிகளை கவனிக்க உதவியாளர் மணிசர்மாவுடன், விஜய் சென்றார். காரை கவுதம் என்பவர் ஓட்டினார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர், விஜய்யின் காரை உரசி சென்றதாக கூறப்படுகுிறது. இதனால் விஜய் அவரை நோக்கி சத்தம் போட்டார். இதையடுத்து அந்த நபர், வேகமாக வந்து காரை வழிமறித்து நிறுத்தி தகராறில் ஈடுபட்டார். தகராறு முற்றவே, அந்த நபர் தனது ஹெல்மெட்டை வைத்து விஜய்யை தாக்க முயன்றார்.
இதில் விஜய் விலகவே, அருகில் இருந்த மணிசர்மா தலையை ஹெல்மெட் தாக்கியது. இதில் அவர் தலையில் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. தாக்குதலில் ஈடுபட்ட அந்த நபர், அங்கிருந்து சென்றுவிட்டார். மணிசர்மா அருகில் இருந்த ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் இதுகுறித்து மணிசர்மா அளித்த புகாரின்பேரில், தேனாம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மோட்டார் சைக்கிளில் வந்தவர் அதே பகுதியை சேர்ந்த ஐசக் என்பது தெரியவந்துள்ளது. அவர் சினிமா நிகழ்ச்சி உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளுக்கு பவுன்சராக பணியாற்றியவர் என்பதும் தெரியவந்துள்ளது.