பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
நாளை டிசம்பர் 15ம் தேதி “அகோரி, ஆலம்பனா, பைட் கிளப், கண்ணகி, பாட்டி சொல்லை தட்டாதே, சபாநாயகன், ஸ்ரீ சபரி ஐயப்பன், தீதும் சூதும்” ஆகிய படங்கள் வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்தன. கணவன், மனைவியான அசோக் செல்வன், கீர்த்தி பாண்டியன் ஆகிய இருவரது படங்களும் நாளைய வெளியீட்டில் போட்டியிட இருந்தன.
அசோக் செல்வன் கதாநாயகனாக நடித்த 'சபாநாயகன்', கீர்த்தி பாண்டியன் கதாநாயகியாக நடித்த 'கண்ணகி' ஆகிய படங்கள் வெளியாக இருந்த நிலையில் 'சபாநாயகன்' வெளியீடு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இப்படம் 22ம் தேதி வெளியாகும் என அசோக் செல்வன் அறிவித்துள்ளார்.
இருப்பினும் நாளை வெளியாக உள்ள படங்களின் பட்டியலில் 'விவேசினி' என்ற படம் சேர்ந்துள்ளது. அதனால் நாளை வெளியாகும் படங்களின் எண்ணிக்கை அதே 8ல் தான் உள்ளது.