போர்ச்சுக்கல் நாட்டிற்கு ஹனிமூன் சென்ற சமந்தா- ராஜ் நிடிமொரு! | காத்திருங்கள்: அஜித்தின் 'மங்காத்தா' விரைவில் ரீ ரிலீஸ்! | தனுஷ் 54வது படத்தின் டைட்டில் போஸ்டர் எப்போது? | கதையின் நாயகியாக மாறிய தனுஷ் பட நடிகை! | ரியோ ராஜின் 'ராம் இன் லீலா' முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு! | நானி படத்தில் இணையும் பிரித்விராஜ்! | மீண்டும் ஒரு தெலுங்கு படத்தை ஒப்பந்தம் செய்த துல்கர் சல்மான்! | எனது பழைய போட்டோக்களை பகிராதீர்கள்: மும்தாஜ் வேண்டுகோள் | லெஸ்பியனாக இருந்தேன்: டைட்டானிக் ஹீரோயின் ஓப்பன் டாக் | சிவகார்த்திகேயனுடன் மீண்டும் இணையும் கல்யாணி |

தமிழ் சினிமாவில் வைகாசி பொறந்தாச்சு படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார் காவேரி. ஆனால், வெள்ளித்திரையில் அவருக்கு பெரிதாக சான்ஸ் கிடைக்கவில்லை. அதன்பிறகு மெட்டி ஒலி சீரியல் தான் அவருக்கு நல்ல அங்கீகாரத்தை பெற்று தந்தது. அதன்பின் ஒன்றிரண்டு தொடர்களில் நடித்து வந்த காவேரி திருமணத்திற்கு பின் சின்னத்திரையை விட்டும் விலகிவிட்டார்.
இந்நிலையில், 10 ஆண்டுகளுக்கு பின் பிரபல ஊடகமொன்றுக்கு பேட்டியளித்துள்ள காவேரி தன் வாழ்வில் நடந்த துன்பகரமான நிகழ்வுகளை பகிர்ந்துள்ளார். 'விஜய், அஜித் என் சமகால நண்பர்கள். அவர்களோடு நடிக்க ஆசை. ஆனால், இப்போது அவர்களுக்கு அம்மா கேரக்டரில் தான் நடிக்க முடியும். அதனால் தான் அந்த ஆசையை தள்ளி வைத்துவிட்டேன்' என்று கூறியுள்ளார். தைராய்டு பிரச்னைக்காக சிகிச்சை எடுத்து வரும் காவேரி குணமடைந்து விரைவில் சீரியல்களில் கம்பேக் கொடுப்பார் என எதிர்பார்க்கலாம்.