நள்ளிரவில் சுவாசிகாவுக்கு மெசேஜ் அனுப்பி சந்தேகம் கேட்ட ஐஸ்வர்ய லட்சுமி | அப்பா உடன் நடிக்க நான் ரெடி : ஸ்ருதிஹாசன் | பராசக்தி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? : இயக்குனர் சுதா விளக்கம் | ரூ.75 கோடி வசூலைக் கடந்த டூரிஸ்ட் பேமிலி | 23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்தில் இணைந்த ரேவதி | மலையாளத்தில் அடியெடுத்து வைத்த காந்தாரா இசையமைப்பாளர் | ஆபாச மார்பிங் வீடியோ : சைபர் கிரைமில் கிரண் புகார் | ரஜினியின் கூலி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது | நாளை வெளியாகும் வனிதா விஜயகுமார் படத்தின் ஆடியோ, டிரைலர் | 16 ஆண்டுகள் கழித்து தந்தையின் படத்திற்காக பாடிய ஸ்ருதிஹாசன் |
சமீபகாலமாக விஜய் - அஜித் ஆகிய இரண்டு நடிகர்களின் ரசிகர்கள் சோசியல் மீடியாவில் மோதிக் கொள்வது அதிகரித்து வருகிறது. சினிமா ரீதியாக மட்டுமின்றி தனிப்பட்ட முறையிலும் விஜய் - அஜித் குறித்த விஷயங்களை கையில் எடுத்துக் கொண்டு ரசிகர்கள் மோதிக் கொள்வதை தவிர்க்குமாறு சில சினிமா பிரபலங்களும் கேட்டுக் கொண்டும் வருகிறார்கள். இப்படியான நிலையில், இயக்குனர் மணிரத்னம் அளித்த ஒரு பேட்டியில், ‛‛சோசியல் மீடியாவில் பலரும் விஷத்தைதான் கக்குகிறார்கள். இது நடுத்தெருவில் நின்று ஒருவருக்கொருவர் கடுமையாக சண்டையிடுவது போல் உள்ளது. முக்கியத்துவம் வாய்ந்த விஷயம் என்றால் அது குறித்து பேசிக் கொள்வது தவறு இல்லை. ஆனால் விஜய் - அஜித் போன்ற நடிகர்களின் ரசிகர்கள் எனக்கு விஜய் தான் பிடிக்கும், எனக்கு அஜித்தான் பிடிக்கும் என்று சொல்லிக்கொண்டு சண்டை போட்டுக்கொள்வது கொஞ்சம் கூட சரி இல்லை,'' என்று அந்த பேட்டியில் மணிரத்னம் தெரிவித்து இருக்கிறார்