சிம்பு நடிக்க இருந்த படத்தில் ரஜினியா? | மகனுக்கு அன்பு முத்தம் கொடுக்கும் நயன்தாரா! லைக்ஸ்களை அள்ளும் புகைப்படம்!! | பாடகி சுசித்ரா மீது கொச்சின் போலீசில் புகார்! | இன்ஸ்டா கணக்கை மீட்டெடுத்த ஜெயம் ரவி | திருவருள், மன்மதன், கொம்பன் - ஞாயிறு திரைப்படங்கள் | மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் |
மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த 'பொன்னியின் செல்வன் 2' படம் முதல் பாகம் அளவிற்கு வரவேற்பையும், வசூலையும் பெறவில்லை. சில பல கதாபாத்திரங்களின் முடிவுகளை மணிரத்னம் மாற்றிவிட்டார் என்பதுதான் படத்தின் தோல்விக்குக் காரணமாக அமைந்தது.
அந்தப் படத்தில் கதாநாயகர்களாக விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி ஆகியோர் நடித்தனர். தெலுங்கில் 'பாகுபலி' படத்திற்குப் பிறகு பிரபாஸ் மார்க்கெட் உயரே போனாலும் அவரால் 'பாகுபலி' அளவிற்கான வெற்றியை இன்னமும் தர முடியவில்லை. அது போலவே 'பொன்னியின் செல்வன் 2'க்குப் பிறகு ஜெயம் ரவி, கார்த்தி நடித்து வெளிவந்த படங்கள் தோல்வியைத்தான் தழுவியுள்ளன.
ஜெயம் ரவி நடித்து கடந்த செப்டம்பர் மாதம் வெளிவந்த 'இறைவன்' படமும், கார்த்தி நடித்து கடந்த வாரம் வெளிவந்த 'ஜப்பான்' படமும் தோல்வியைத் தழுவின. அடுத்து விக்ரம் நடித்துள்ள 'துருவ நட்சத்திரம்' நவம்பர் 24ம் தேதி வெளியாக உள்ளது. ஜெயம் ரவி, கார்த்தியின் சென்டிமென்ட் விக்ரமையும் பாதிக்குமா அல்லது அவர் மீள்வாரா என்பது அடுத்த வாரம் தெரிந்துவிடும்.