பூஜா ஹெக்டேவுக்கு என்னதான் ஆச்சு ? | ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கும் சூரி | அருண் பிரசாத், அர்ச்சனா திருமண நிச்சயதார்த்தம் நடந்தது | பாட்டி மறைவு : அல்லு அர்ஜூன் உருக்கம் | தெரு நாய் தொடர்பான விவாத நிகழ்ச்சி : மன்னிப்பு கேட்டார் படவா கோபி | டிசம்பரில் திரைக்கு வரும் வா வாத்தியார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | ராஜூ முருகனின் மை லார்ட் என்ன பேசுகிறது? | டிரைலர் உடன் புதிய ரிலீஸ் தேதியை அறிவித்த அதர்வாவின் தணல் படக்குழு! | 'குட்டி ஏஐ அனுஷ்கா' வீடியோ பகிர்ந்த அனுஷ்கா | வெளிநாடுகளில் 20 மில்லியன் டாலர் வசூலித்த 'கூலி' |
மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த 'பொன்னியின் செல்வன் 2' படம் முதல் பாகம் அளவிற்கு வரவேற்பையும், வசூலையும் பெறவில்லை. சில பல கதாபாத்திரங்களின் முடிவுகளை மணிரத்னம் மாற்றிவிட்டார் என்பதுதான் படத்தின் தோல்விக்குக் காரணமாக அமைந்தது.
அந்தப் படத்தில் கதாநாயகர்களாக விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி ஆகியோர் நடித்தனர். தெலுங்கில் 'பாகுபலி' படத்திற்குப் பிறகு பிரபாஸ் மார்க்கெட் உயரே போனாலும் அவரால் 'பாகுபலி' அளவிற்கான வெற்றியை இன்னமும் தர முடியவில்லை. அது போலவே 'பொன்னியின் செல்வன் 2'க்குப் பிறகு ஜெயம் ரவி, கார்த்தி நடித்து வெளிவந்த படங்கள் தோல்வியைத்தான் தழுவியுள்ளன.
ஜெயம் ரவி நடித்து கடந்த செப்டம்பர் மாதம் வெளிவந்த 'இறைவன்' படமும், கார்த்தி நடித்து கடந்த வாரம் வெளிவந்த 'ஜப்பான்' படமும் தோல்வியைத் தழுவின. அடுத்து விக்ரம் நடித்துள்ள 'துருவ நட்சத்திரம்' நவம்பர் 24ம் தேதி வெளியாக உள்ளது. ஜெயம் ரவி, கார்த்தியின் சென்டிமென்ட் விக்ரமையும் பாதிக்குமா அல்லது அவர் மீள்வாரா என்பது அடுத்த வாரம் தெரிந்துவிடும்.