14 வருடங்களுக்குப் பிறகு தனுஷ் - தேவிஸ்ரீபிரசாத் கூட்டணி | பெண் இயக்குனர் படத்தில் லண்டன் நடிகை | ஆஸ்கர் லைப்ரரியில் இடம்பிடித்த தமிழர் படம் | பிளாஷ்பேக் : காரில் பயணம் செய்யாத நடிகை | பிளாஷ்பேக் : காப்பி மேல் காப்பி அடிக்கப்பட்ட படம் | கதாநாயகனாகத் தொடரும் சூரி, இடைவெளி விடும் சந்தானம்.. | நான் பெண்ணாக பிறந்திருந்தால் கமலை திருமணம் செய்திருப்பேன் : சிவராஜ்குமார் | ஜிங்குச்சா - கமல்ஹாசன், சிலம்பரசன் நடனத்தில்… முதல்பாடல் நாளை வெளியீடு | 100 கோடி ரூபாய் வீட்டிற்குக் குடிப்போகும் தீபிகா படுகோனே - ரன்வீர் சிங் | எனக்கு என்ன ஆச்சு ? நஸ்ரியா தன்னிலை விளக்கம் |
கன்னட சினிமாவின் முன்னணி நடிகை ராகினி திவேதி. தமிழில் ஜெயம் ரவி ஜோடியாக 'நிமிர்ந்து நில்' படத்தில் நடித்தார். போதை பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட பிறகு அவரது மார்க்கெட் சரிந்தது. தற்போது ஜாமீனில் விடுதலையாகி உள்ள ராகினி, கன்னட சினிமாவில் மீண்டும் நடிக்கத் தொடங்கி இருக்கிறார். அவர் நடித்த ஷீலா என்ற படம் சமீபத்தில் வெளியானது. தமிழில் 'கிக்' படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியிருந்தார்.
இந்த நிலையில் 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தமிழில் 'ஈமெயில்' என்ற படத்தில் நாயகியாக நடிக்கிறார். முருகா அசோக்குமார் நாயகனாக நடித்துள்ளார். இரண்டாவது ஹீரோயினாக போஜ்புரி மற்றும் ஹிந்தி படங்களில் நடித்துள்ள ஆர்த்தி நடிக்க, இரண்டாவது ஹீரோவாக ஆதவ் பாலாஜி நடித்துள்ளார். மனோபாலா மற்றும் லொள்ளு சபா மனோகர் முக்கிய வேடங்களிலும், பில்லி முரளி வில்லனாகவும் நடித்துள்ளனர்.
இந்த படம் குறித்து தயாரிப்பாளரும், இயக்குநருமான எஸ்.ஆர் ராஜன் கூறும்போது, ‛‛ஹீரோயினுக்கு திடீரென ஒரு ஈமெயில் வருகிறது. அதில் குறிப்பிட்ட லிங்க்கை கிளிக் செய்து விளையாடினால் மிகப்பெரிய பரிசு காத்திருப்பதாக சொல்லப்படுகிறது, அந்த விளையாட்டிற்குள் இறங்கிய கதாநாயகி எதிர்பாராத விதமாக ஒரு மாபியா கேங்கில் சிக்கிக் கொள்கிறார். இதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா என்பதுதான் படத்தின் கதை. சமீப காலமாக ஆன்லைன் விளையாட்டுக்களில் நடக்கும் மோசடிகளையும், அதனால் ஏற்படும் பாதிப்புகளையும் மையப்படுத்தி இந்த படத்தின் கதையை உருவாக்கி உள்ளோம். காமெடி, ஆக்சன், சென்டிமென்ட் கலந்த சஸ்பென்ஸ் திரில்லராக இந்த படம் தமிழ், கன்னடம் என இரு மொழிகளில் உருவாகி உள்ளது'' என்றார்.