கல்கி 2ம் பாகத்தில் தீபிகா இல்லை: தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு | தங்கை என அழைத்து என் இதயத்தை நொறுக்கினார் : அஜித் மீதான கிரஷ் குறித்து நடிகை மகேஸ்வரி | பிளாஷ்பேக்: ரஜினி பட கிளைமாக்சை மாற்றிய ஏவிஎம் சரவணன் | பிளாஷ்பேக்: பண்டரிபாயை தெரியும், மைனாவதியை தெரியுமா? | சவுந்தர்யாவுடன் சேர்ந்து நானும் போயிருக்க வேண்டியது : மீனா பகிர்ந்த புதிய தகவல் | நான் சிறுவனாக இருந்தபோது எங்களுக்கு முதல்வராக இருந்தவர் மோடி : உன்னி முகுந்தன் பெருமிதம் | மோகன்லாலுக்கே தெரியாமல் அவர்மீது 12 வருட கோபம் : இயக்குனர் சத்யன் அந்திக்காடு புது தகவல் | நடிகர் சித்திக்கிற்கு அரபு நாடுகளுக்கு செல்ல நிபந்தனையுடன் அனுமதி வழங்கிய நீதிமன்றம் | கமலின் அடுத்த படங்களின் இயக்குனர் பட்டியலில் இவரா? | பாலாவின் அடுத்த பட ஹீரோ: தமிழக தொழிலதிபர் வீட்டு வாரிசு? |
ஜெய் பீம் பட இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் தனது 170வது படத்தில் நடித்து வருகிறார். அவருடன் இணைந்து அமிதாப் பச்சன், பஹத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷரா விஜயன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். லைகா புரொடக்சன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார்.
ஏற்கனவே இதன் முதற்கட்ட படப்பிடிப்பு திருவனந்தபுரம், திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் நடைபெற்று வந்தது. இதையடுத்து கடந்த வாரத்தில் இதன் அடுத்தகட்ட படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்றது. இதில் ரஜினிகாந்த், அமிதாப்பச்சன் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டது. இதன் படப்பிடிப்பு முடிந்து ரஜினி சென்னை திரும்பினார். தற்போது இப்படத்தில் அமிதாப்பச்சன் நடிக்கும் கதாபாத்திரம் குறித்து புதிய தகவல் கிடைத்தது. அதன்படி, இதில் அமிதாப்பச்சன் சீனியர் வக்கீல் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.