அனந்தா திரை படைப்பல்ல... இறை படைப்பு : பா.விஜய் நெகிழ்ச்சி | பாலிவுட் தயாரிப்பாளர்களுடன் இணைந்த கார்த்திக் சுப்பராஜ் | என் குறைகளை திருத்திக் கொள்கிறேன் : டிடிஎப் வாசன் | கடந்த வாரம் ரிலீசான படங்களின் வரவேற்பு எப்படி? | எனக்கும் கடன் இருக்கு : விஜய்சேதுபதி தகவல் | அமலாக்கத்துறைக்கு வந்த ஸ்ரீகாந்த்: 10 மணி நேரம் விசாரணை | 70 கோடி வசூலித்த 'பைசன்' | பிளாஷ்பேக் : 18 வயதில் இயக்குனரான சுந்தர் கே.விஜயன் | பிளாஷ்பேக் : 22 மொழிகளில் சப் டைட்டில் போடப்பட்ட முதல் தமிழ் படம் | 150 ரூபாய் இல்லாமல் கஷ்டப்பட்டேன்: இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் |

இயக்குனர் பிரியதர்ஷனின் மகளான கல்யாணி தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளிலும் நல்ல படங்களாக தேர்வு செய்து நடித்து வெற்றி பெற்று வருகிறார். அந்த வகையில் தற்போது மலையாளத்தில் அவர் சேஷம் மைக்கில் பாத்திமா என்கிற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் கட்டுப்பாடுகள் மிகுந்த ஒரு இஸ்லாமிய குடும்பத்தில் இருந்து தைரியமாக வெளிவந்து கால்பந்து அணிகளுக்கு இடையே நடக்கும் போட்டியில் கமெண்டரி செய்யும் கதாபாத்திரத்தில் கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ளார். வரும் நவம்பர் மூன்றாம் தேதி இந்த படம் வெளியாக இருக்கிறது. இதனைத் தொடர்ந்து புரமோஷன் நிகழ்ச்சிகளை படக்குழுவினர் துவங்கியுள்ளனர்.
அந்த வகையில் சமீபத்தில் கொச்சியில் கேரளா பிளாஸ்டர்ஸ் மற்றும் ஒடிசா எப்.சி கால்பந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் கல்யாணி உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். மேலும் கல்யாணி பிரியதர்ஷன் இந்த படத்திற்காக தான் பயிற்சி பெற்றது, நடித்தது ஆகிய அனுபவங்களை கொண்டு கொஞ்ச நேரம் இந்த போட்டியின் போது தானே லைவ்வாக கமெண்ட்ரி செய்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார். அப்படியே அங்கே வருகை தந்திருந்த பார்வையாளர்களிடம் தங்களது படத்திற்கு ஆதரவு அளிக்குமாறு கேட்டுக் கொண்டார் கல்யாணி பிரியதர்ஷன்.