பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

இயக்குனர் பிரியதர்ஷனின் மகளான கல்யாணி தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளிலும் நல்ல படங்களாக தேர்வு செய்து நடித்து வெற்றி பெற்று வருகிறார். அந்த வகையில் தற்போது மலையாளத்தில் அவர் சேஷம் மைக்கில் பாத்திமா என்கிற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் கட்டுப்பாடுகள் மிகுந்த ஒரு இஸ்லாமிய குடும்பத்தில் இருந்து தைரியமாக வெளிவந்து கால்பந்து அணிகளுக்கு இடையே நடக்கும் போட்டியில் கமெண்டரி செய்யும் கதாபாத்திரத்தில் கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ளார். வரும் நவம்பர் மூன்றாம் தேதி இந்த படம் வெளியாக இருக்கிறது. இதனைத் தொடர்ந்து புரமோஷன் நிகழ்ச்சிகளை படக்குழுவினர் துவங்கியுள்ளனர்.
அந்த வகையில் சமீபத்தில் கொச்சியில் கேரளா பிளாஸ்டர்ஸ் மற்றும் ஒடிசா எப்.சி கால்பந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் கல்யாணி உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். மேலும் கல்யாணி பிரியதர்ஷன் இந்த படத்திற்காக தான் பயிற்சி பெற்றது, நடித்தது ஆகிய அனுபவங்களை கொண்டு கொஞ்ச நேரம் இந்த போட்டியின் போது தானே லைவ்வாக கமெண்ட்ரி செய்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார். அப்படியே அங்கே வருகை தந்திருந்த பார்வையாளர்களிடம் தங்களது படத்திற்கு ஆதரவு அளிக்குமாறு கேட்டுக் கொண்டார் கல்யாணி பிரியதர்ஷன்.