துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள லியோ படம் கடந்த வியாழக்கிழமை அன்று திரைக்கு வந்தது. இப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்து வந்த போதும், முதல் நாளில் 148 கோடி ரூபாய் வசூலித்து இந்திய அளவில் சாதனை செய்துள்ளது. அதோடு அடுத்தடுத்து விடுமுறை தினங்களாக உள்ளதால் லியோ படத்தின் வசூல் இன்னும் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் லியோ படத்தை பார்த்த ரஜினி, கமல் உள்ளிட்ட பல திரைப்பிரபலங்களும் அப்படத்தை வாழ்த்தியுள்ள நிலையில் தற்போது இயக்குனர் மாரி செல்வராஜூம் லியோ படத்தை பார்த்துவிட்டு தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவு போட்டுள்ளார். அதில், ‛லியோ படத்தை பார்த்து மகிழ்ச்சி அடைந்தேன். குறிப்பாக லியோ தாஸ் கதாபாத்திரம் மிரட்டலாக இருக்கிறது. படக்குழுவுக்கு வாழ்த்துக்கள்' என்று அவர் பதிவிட்டிருக்கிறார்.