கவினுக்கு ஜோடியான பிரியங்கா மோகன் | தெலுங்கு படத்தில் விலைமாதுவாக நடிக்கும் கயாடு லோஹர் | பிரேமலு ஹீரோவின் புதிய படப்பிடிப்பை துவங்கி வைத்த பஹத் பாசில் | கூலி ரிலீஸ் தேதி கவுன்ட் டவுன் போஸ்டர் வெளியானது | “என் உயிருக்கு ஏதாவது ஆனால்...” : நடிகர் பாலாவின் 3-வது மனைவி மருத்துவமனையில் அனுமதி | அடுத்த ஆண்டு துவக்கத்தில் விக்ரமை இயக்கும் பிரேம்குமார் | நடிகை கியாரா அத்வானிக்கு பெண் குழந்தை பிறந்தது | 'குட் பேட் அக்லி' வெளியாகி மூன்று மாதங்கள் : இன்னும் வராத அஜித்தின் அடுத்த பட அறிவிப்பு | 3 நாட்கள் தியேட்டர் வளாகத்திற்குள் ‛நோ' விமர்சனம் : விஷால் வேண்டுகோள் | ரூ.6 கோடியை திருப்பி கேட்கும் தயாரிப்பு நிறுவனம் : பதிலுக்கு ரூ.9 கோடி நஷ்ட ஈடு கேட்கிறார் ரவி மோகன் |
2000-ம் ஆண்டில் பாண்டியராஜன் இயக்கத்தில் பிரபு தேவா நாயகனாக நடித்த டபுள்ஸ் சென்ற படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஸ்ரீகாந்த் தேவா. அதன்பிறகு குத்து, குமரன் சன் ஆப் மகாலட்சுமி, ஜித்தன், சிவகாசி உள்பட ஏராளமான படங்களுக்கு இசையமைத்தார். தற்போது கருவறை என்ற குறும்படத்துக்கு இசை அமைத்ததற்காக தேசிய விருது பெற்றுள்ளார். 69வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
ஸ்ரீகாந்த் தேவா அளித்த பேட்டியில், ‛‛இந்த தேசிய விருது நான் இசையமைத்துள்ள கருவறை என்ற குறும்படத்திற்காக கிடைத்திருக்கிறது. இந்திய ஜனாதிபதி கையில் இந்த விருதை வாங்கியது மகிழ்ச்சியாகவும் பெருமையாக உள்ளது. இந்த விருதை இசையமைப்பாளரான எனது தந்தை தேவாவுக்கு அர்ப்பணிக்கிறேன். என் அப்பா ஏராளமான விருதுகள் வாங்கி இருக்கிறார். என்றாலும் நான் வாங்கியுள்ள இந்த விருதை அவர் சிறப்பாக நினைப்பார். மேலும், இதற்கு முன்பு கடந்த 20 ஆண்டுகளாக நான் இசையமைத்த எத்தனையோ படங்கள் என்னுடைய பெயர் போட்டு விருதுகளுக்கு சென்றுள்ளது. அப்போது விருது கிடைத்ததில்லை. ஆனால் இந்த படத்துக்கு இசையமைக்கும்போது விருது கிடைக்கும் என்ற எதிர்பார்க்கவே இல்லை. ஆனால் விருது கிடைத்திருக்கிறது என்று தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார் ஸ்ரீகாந்த் தேவா.