மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
சென்னை: நடிகர் விஷாலின் புகாரை தொடர்ந்து இந்தி டப்பிங்கிற்கு சென்னை அலுவலகத்திலேயே தணிக்கைசெய்து கொள்ளலாம் என மத்திய தகவல் ஒலிபரப்பு துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
நடிகர் விஷால் மார்க் ஆண்டனி இந்தி டப்பிங் படத்திற்காக மும்பை தணிக்கை துறை அலுவலக அதிகாரிகள் தன்னிடம் லஞ்சம் கேட்டனர் என கூறிய புகார் பெரும்பரபரப்பை உருவாக்கியது.
இதனையடுத்து மத்திய ஒலிபரப்பு துறை அமைச்சகம் புதிய அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.இதன்படி தென்னிந்திய படங்கள் தொடர்புடைய தணிக்கை அலுவலகத்திலேயே சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளலாம். பரிசோதனை முயற்சியாக வரும் அக்.,20 ம் தேதி முதல் அடுத்து வரும் ஆறு மாத காலத்திற்கு இது நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவித்து உள்ளது.
முன்னதாக இந்தி டப்பிங் படங்களுக்கு தணிக்கை மும்பை அலுவலகத்தில் சான்றிதழ் பெற வேண்டும் என்ற நிலை இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.