தெலுங்குக்கு முன்னுரிமை தரும் நயன்தாரா | 2026 கோடை விடுமுறையில் திரைக்கு வரும் விஷாலின் 'மகுடம்'! | காதலருடன் பிரேக்ப்பா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரியா பவானி சங்கர்! | அருள் நிதியின் 'டிமான்டி காலனி -3' படத்தின் போஸ்டர் வெளியானது! | வித் லவ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | புத்தாண்டு பிறந்தாச்சு..... ஓடிடியில் புதுப்படங்களும் வரிசை கட்ட ஆரம்பிச்ச்சாச்சு....! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை வெளியீடு | 'சல்லியர்கள்' படத்தை திரையிட தியேட்டர் இல்லை: தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வேதனை | ரஜினிகாந்த்தின் ஆசைகள் 2026ல் நிறைவேறுமா? | இளையராஜா இசையில் பாடிய அறிவு, வேடன் |

சென்னை: நடிகர் விஷாலின் புகாரை தொடர்ந்து இந்தி டப்பிங்கிற்கு சென்னை அலுவலகத்திலேயே தணிக்கைசெய்து கொள்ளலாம் என மத்திய தகவல் ஒலிபரப்பு துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
நடிகர் விஷால் மார்க் ஆண்டனி இந்தி டப்பிங் படத்திற்காக மும்பை தணிக்கை துறை அலுவலக அதிகாரிகள் தன்னிடம் லஞ்சம் கேட்டனர் என கூறிய புகார் பெரும்பரபரப்பை உருவாக்கியது.
இதனையடுத்து மத்திய ஒலிபரப்பு துறை அமைச்சகம் புதிய அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.இதன்படி தென்னிந்திய படங்கள் தொடர்புடைய தணிக்கை அலுவலகத்திலேயே சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளலாம். பரிசோதனை முயற்சியாக வரும் அக்.,20 ம் தேதி முதல் அடுத்து வரும் ஆறு மாத காலத்திற்கு இது நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவித்து உள்ளது.
முன்னதாக இந்தி டப்பிங் படங்களுக்கு தணிக்கை மும்பை அலுவலகத்தில் சான்றிதழ் பெற வேண்டும் என்ற நிலை இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.