எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் லியோ. இப்படத்தின் இறுதி கட்டப் பணிகள் மற்றும் புரமோசன்கள் நடைபெற்று வரும் நிலையில், இசை விழா வருகிற 30-ஆம் தேதி நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது. இந்த நிலையில் லியோ படத்தை தயாரித்துள்ள செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ லலித்குமாருக்கு ஆளும் கட்சி தரப்பு மிரட்டல் விடுத்ததாக அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவு போட்டிருக்கிறார்.
அதில், லியோ படத்தின் இசை விழாவை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடத்துவதற்கு திமுக அரசு இதுவரை அனுமதி கொடுக்கவில்லை. இந்த படத்தின் சென்னை, செங்கல்பட்டு, வட ஆற்காடு, தென்னாற்காடு ஆகிய ஏரியாக்களின் விநியோக உரிமையை தங்களுக்கு கொடுத்தால் மட்டுமே ஆடியோ விழாவுக்கு அனுமதி வழங்கப்படும் என்று திமுக தரப்பு தெரிவித்ததாக தெரிவித்து இருந்தார்.
இந்த செய்தி சோசியல் மீடியாவில் வைரலானதை அடுத்து விஜய் ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்தார்கள். ஆனால் தற்போது லியோ படத்தின் தயாரிப்பாளர் லலித் குமார் அந்த செய்தியை மறுத்து ஒரு பதிவு போட்டுள்ளார். அந்த பதிவில், சவுக்கு சங்கர் வெளியிட்டுள்ள இந்த தகவல் உண்மையில்லை. முற்றிலும் தவறான தகவல் என்று அவர் தெரிவித்திருக்கிறார்.