வித்தியாசமா கூவுறாங்க! மணிமேகலை வெளியிட்ட நறுக் வீடியோ | சீரியலிலும் அட்ஜெஸ்ட்மென்ட் இருக்கு - நிமிஷிகா பளீச் பேட்டி | சிம்பு நடிக்க இருந்த படத்தில் ரஜினியா? | மகனுக்கு அன்பு முத்தம் கொடுக்கும் நயன்தாரா! லைக்ஸ்களை அள்ளும் புகைப்படம்!! | பாடகி சுசித்ரா மீது கொச்சின் போலீசில் புகார்! | இன்ஸ்டா கணக்கை மீட்டெடுத்த ஜெயம் ரவி | திருவருள், மன்மதன், கொம்பன் - ஞாயிறு திரைப்படங்கள் | மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் லியோ. இப்படத்தின் இறுதி கட்டப் பணிகள் மற்றும் புரமோசன்கள் நடைபெற்று வரும் நிலையில், இசை விழா வருகிற 30-ஆம் தேதி நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது. இந்த நிலையில் லியோ படத்தை தயாரித்துள்ள செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ லலித்குமாருக்கு ஆளும் கட்சி தரப்பு மிரட்டல் விடுத்ததாக அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவு போட்டிருக்கிறார்.
அதில், லியோ படத்தின் இசை விழாவை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடத்துவதற்கு திமுக அரசு இதுவரை அனுமதி கொடுக்கவில்லை. இந்த படத்தின் சென்னை, செங்கல்பட்டு, வட ஆற்காடு, தென்னாற்காடு ஆகிய ஏரியாக்களின் விநியோக உரிமையை தங்களுக்கு கொடுத்தால் மட்டுமே ஆடியோ விழாவுக்கு அனுமதி வழங்கப்படும் என்று திமுக தரப்பு தெரிவித்ததாக தெரிவித்து இருந்தார்.
இந்த செய்தி சோசியல் மீடியாவில் வைரலானதை அடுத்து விஜய் ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்தார்கள். ஆனால் தற்போது லியோ படத்தின் தயாரிப்பாளர் லலித் குமார் அந்த செய்தியை மறுத்து ஒரு பதிவு போட்டுள்ளார். அந்த பதிவில், சவுக்கு சங்கர் வெளியிட்டுள்ள இந்த தகவல் உண்மையில்லை. முற்றிலும் தவறான தகவல் என்று அவர் தெரிவித்திருக்கிறார்.