மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
விஜய் அரசியலுக்கு வருவது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது. தமிழ்நாடு முழுக்க தனது மக்கள் இயக்கத்தை வலுவாக கட்டமைத்திருக்கிறார். அமைப்பு ரீதியாக வலுவானதாக அதை மாற்றி உள்ளார். அடிக்கடி மாவட்ட நிர்வாகிகளை, தொகுதி நிர்வாகிகளை சந்தித்து வருகிறார். பல்வேறு நலத்தட்ட உதவிகள் வழங்கவும், உள்ளூர் பிரச்சினைகளில் முன்னுக்கு நிற்கவும் மன்ற நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இந்த நிலையில் அடுத்தகட்டமாக அவரது கவனம் பெண்கள் பக்கம் திரும்பி இருக்கிறது. ரசிகர்களை போலவே பெண்களையும் மாநிலம் முழுவதும் அமைப்பு ரீதியாக வலுப்படுத்த முடிவு செய்திருக்கிறார். இதற்காக மாவட்ட, தொகுதி மகளிர் அணி நிர்வாகிகளை சென்னைக்கு அழைத்திருக்கிறார். வருகிற 9ம் தேதி காலை 10 மணிக்கு பனையூரில் உள்ள மக்கள் இயக்க அலுவகத்தில் அவர்களை சந்தித்து பேசுகிறார். தற்போது விஜய் அமெரிக்காவில் இருக்கிறார். இதற்காக அவர் சென்னை திரும்புவார் என்று தெரிகிறது. ஒருவேளை திரும்பாவிட்டால் ஆன்லைன் மூலமாக பெரிய திரையில் தோன்றி அவர் பெண் நிர்வாகிகளுடன் பேச ஏற்பாடு நடந்து வருவதாக கூறப்படுகிறது.