மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
69வது தேசிய திரைப்பட விருதுகள் சில தினங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டன. இதில் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியான புஷ்பா படத்தில் சிறப்பாக இசையமைத்தமைக்காக இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத்திற்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு புஷபா படக்குழுவினர், நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.
இந்நிலையில் தனக்கு தேசிய விருது கிடைத்ததை அடுத்து சென்னையில் உள்ள இளையராஜா ஸ்டுடியோவிற்கு சென்ற தேவிஸ்ரீ பிரசாத், அங்கு இளையராஜாவை சந்தித்து வாழ்த்து பெற்றார். அவரது காலில் விழுந்து ஆசி பெற்றார். இளையராஜாவும், தேவிஸ்ரீபிசாத்தை வாழ்த்தினார். இதுதொடர்பாக வீடியோவை வெளியிட்டுள்ள தேவிஸ்ரீ பிரசாத், ‛‛தேசிய விருது பெறுவதற்கு வழிவகுத்த அனைத்து ஊக்கங்களும் தந்த இசைஞானி இளையராஜாவுக்கு நன்றி” என்று குறிப்பிட்டுள்ளார்.