'3 பிஎச்கே' முதல் 'தம்முடு' வரை: இந்த வார ஓடிடி ரிலீஸ் என்னென்ன? | ரிஷப் ஷெட்டியின் புதிய படத்தின் அப்டேட்! | சென்னை கல்லூரி சாலை நடிகர் ஜெய்சங்கர் சாலை ஆகிறது | மீண்டும் இணையும் பாண்டிராஜ், விஜய் சேதுபதி கூட்டணி! | சரியான நேரம் அமையும் போது சூர்யாவை வைத்து படம் இயக்குவேன் -லோகேஷ் கனகராஜ்! | புதுமுக இயக்குனரை ஆச்சரியப்படுத்திய விஜய்! - இயக்குனர் பாபு விஜய் | விஜய் உட்கட்சி பிரச்னை: உதயாவின் 'அக்யூஸ்ட்' படத்தில் இடம் பெறுகிறதா? | போகியை புறக்கணித்தார் சுவாசிகா: பழசை மறப்பது சரியா? | ஒரே படத்தில் இரண்டு புதுமுகங்கள் அறிமுகம் | துல்கர் இருப்பதால் நான் தனிமையை உணரவில்லை: கல்யாணி |
சில வருடங்களுக்கு முன்பு தெலுங்கில் வெளியான அர்ஜுன் ரெட்டி திரைப்படம் மூலம் பிரபலமான ஹீரோவாக மாறினார் விஜய் தேவரகொண்டா. அதைத் தொடர்ந்து அவர் நடித்த கீதா கோவிந்தம் படத்தில் அவருடன் இணைந்து நடித்த கன்னட நடிகை ராஷ்மிகா மந்தனாவும் மிகப்பெரிய அளவில் பிரபலமானார். சொல்லப்போனால். குறிப்பாக இந்த படத்தில் இடம்பெற்ற இன்கெம் இன்கெம் காவாலே என்கிற பாடலும் அதில் இவர்கள் இருவரின் நடிப்பும் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டது. இதையடுத்து இந்த ஜோடி ரசிகர்களின் மனம் கவர்ந்த ஜோடியாக மாறியது. இந்த படத்தை இயக்குனர் பரசுராம் இயக்கியிருந்தார்.
இந்த நிலையில் இந்தப் படம் வெளியாகி ஐந்தாம் வருடத்தை எட்டியுள்ளது. இதனை இயக்குனர் பரசுராமுடன் சேர்ந்து நாயகன் விஜய் தேவரகொண்டாவும் நாயகி ராஷ்மிகாவும் கொண்டாடி மகிழ்ந்துள்ளனர். விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா இருவரும் நெருங்கிய நட்பில் இருந்து வருகின்றனர் என்றும் காதலிக்கின்றனர் என்றும் கூட சொல்லப்பட்டு வரும் நிலையில் இவர்கள் இருவரும் சமீப காலமாக பொது வெளியில் இணைந்து வருவதை தவிர்த்து வந்தனர். இந்த நிலையில் கீதா கோவிந்தம் படத்தின் ஐந்தாவது ஆண்டு விழாவை கொண்டாடுவதற்காக இருவரும் ஒன்று கூடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.