முதல் பட ஹீரோ ஸ்ரீ-க்கு ஆதரவாக லோகேஷ் கனகராஜ் | மொழிப்போர் நடக்குற நேரம்... இது எங்க மும்மொழித் திட்டம் : தக் லைப் பட விழாவில் கமல் பேச்சு | 'மண்டாடி' : சூரியின் அடுத்த படம் | மருத்துவ கண்காணிப்பில் நடிகர் ஸ்ரீ... தவறான தகவல்களை பரப்பாதீங்க.... : குடும்பத்தினர் அறிக்கை | என்னை பற்றி என் தயாரிப்பாளர்களிடம் கேளுங்கள்: பாலிவுட் பாடகருக்கு ஏ.ஆர்.ரஹ்மான் பதில் | பிளாஷ்பேக் : மம்பட்டியான் பாணியில் உருவான கொம்பேறி மூக்கன் | தன்னை போன்று குறைபாடு உடையவரையே மணந்த அபிநயா | இளையராஜாவை தொடர்ந்து சிம்பொனி இசை அமைக்கும் இன்னொரு தமிழர் | அர்ஜுன் இளைய மகளுக்கு டும் டும் : இத்தாலி தொழில் அதிபரை மணக்கிறார் | பிளாஷ்பேக்: நாரதராக வாழ்ந்த நாகர்கோவில் மகாதேவன் |
எ கியூப் மூவீஸ் ஆப் நிறுவனம் தயாரிக்கும் படம் 'எக்ஸ் ஆர்மி'. இதில் ஜெய் ஆகாஷ் முன்னாள் ராணுவ அதிகாரியாக நடிக்கிறார். கதாநாயகிகளாக அஷ்மிதா, அக்ஷயா நடிக்கிறார்கள். இவர்களுடன் இமான் அண்ணாச்சி, கராத்தே ராஜா, மீசை ராஜேந்திரன், மைக்கேல் அகஸ்டின், ராஜ்மித்ரன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். சாய்பிரபா மீனா இயக்குகிறார். ஏ.சி.மணிகண்டன் ஒளிப்பதிவு செய்கிறார். எஸ்.சதீஷ் குமார் இசை அமைக்கிறார்.
படம் பற்றி ஜெய் ஆகாஷ் கூறியதாவது: ராணுவத்தில் பணிபுரிந்து ஓயுவு பெறும் வீரர் நாட்டில் பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகள், பாலியல் துன்புறுத்தல்களை கண்டு ஆவேசம் அடைகிறார். அதை தட்டி கேட்க முடிவு செய்து ஏற்கனவே ராணுவத்தில் பணியாற்றிய எக்ஸ் ஆர்மி மேன்கள், மற்றும் போரில் காயம் அடைந்து ஊனமுற்று இன்னும் தேச பக்தியுடன் இருக்கும் முன்னாள் ராணுவ வீரர்களை ஒரு படைபோல் திரட்டி பெண்களுக்கு எதிரான குற்றங்களை செய்யும் அக்கிரமக்காரர்களை தேடிப் பிடித்து எப்படி பழிவாங்குகிறார் என்பதை ஆக்ஷன் அதிரடியுடன் இப்படம் சொல்கிறது.
எல்லையை காப்பாற்றியவர்கள் நாட்டுக்குள் பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளை தட்டி கேட்டு அவர்களை எப்படி காக்கிறார்கள் என்பதுதான் படத்தின் மையக்கரு. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 5 மொழிகளில் இப்படம் உருவாகிறது. விரைவில் படப்பிடிப்பு தொடங்கி சென்னை, பெங்களுர், மும்பையில் நடக்கிறது. இந்த ஆண்டு இறுதியில் திரைக்கு வருகிறது. என்றார் ஜெய் ஆகாஷ்.